Thursday, May 29, 2008

குருவியைப் பறக்க விடுங்கள்.

சில நாட்களாகவே, குருவி படத்தையும் அதன் நாயகன் விஜயையும் கிண்டல் செய்யும் வண்ணம் மெசெஜுகளும் ச்க்ராப்புகளும் வந்து குவிகின்றன. யோசித்துப்பார்த்தால் இதனால் குருவி படத்திற்கு பெரியதொரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கின்றனர் "தலை"யின் ரசிகர்கள். ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை ஏற்றுத் தன் திறைமை முழுவதையும் பயன்படுத்தி ரசிகர்கள் ஏற்று இன்புறும் வண்ணம் திரையில் தருவதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். யாரும் விரும்பாத , வெறுக்கும் கதையை திரையில் வழங்கும் எண்ணம் அவனுக்கில்லை. இதுபோன்ற துவேஷங்களால் அவன் துவண்டு போவதுமில்லை.
படம் பிடிதிருப்பவர்கள் பார்க்கிறார்கள். பிடிக்காதவர்கள் சும்மா இருந்துவிட்டுப் போகலாமே? இது போல மண் வாரித் தூற்றும் எண்ணம் எதற்கு? சிவாஜி - MGR, ரஜினி - கமல் , போன்ற தமிழ்த் திரையில் தடம் பதித்த பெரும் நடிகர்கள் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. தங்கள் நாயகர்கள் படம் ரிலீசாகும் நேரம் , தோரணம் கட்டுவது, போஸ்டர் ஓட்டுவது, பால் அபிஷேகம் செய்வது என்று இம்சை இல்லாத வகையில் தங்கள் தலைவர்களைக் கொண்டாடினார்கள்.
நாம் ஆங்கிலப் படங்களில் வீர தீர சண்டைக் காட்சிகளைக் கண்டு பெரிதாகப் பாராட்டுகிறோம். ஆனால் அதையே நம் நாயகன் ஒருவன் செய்தால் கிண்டலடிக்கிறோம். தூம் ஹிந்தி படம் பார்த்து சிலாகிக்கிறோம் . ஆனால் தமிழ்ப் படத்தில் சாகசக் காட்சியை நையாண்டி செய்கிறோம். MGR நூறு பேரை அடித்து துவம்சம் செய்யவில்லையா ? ரஜினி ஆயிரம் பேரை ஊதித் தள்ளவில்லையா ? இதை எல்லாம் கலை என்று ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளோர் குருவியை மட்டும் பறக்க விடாமல் சிறகொடிப்பதேன்.

3 comments:

Anonymous said...

Good sense of humour and thinking.

Anonymous said...

Good sense of humour and thought.

Anonymous said...

Good post na.These type of messages really create a unwanted publicity to such masala movies. Same happens wen any ajith film releases.. Message cost panna ithellam thannala ninnu poidum na.