Wednesday, April 30, 2008

humanism

Accidents have become so common these days and I have been having my square share of it at regular intervals. Almost one major hit every year is the current record. Now my latest accident turned out to open my eyes towards humanism.
It happened in late February this year. The morning was as pleasant as it would always be in Coimbatore and I set out to a campus interview. The venue was Kongunadu Arts and Science College, The very same place wher I studied a quarter century back. So it was something special to me. I wore my best. Everything went well till I neared my office. At Sungam junction, I was cruising alongside a Maruti Esteem. Suddenly a group of people attempted to cross the road. So I slowed down. Then on seeing the car, the group backed out and I revved up again. Then it happened, the accident. One old man in the group, in the haste to cross the road, ran accross in front of the Maruti and came directly in front of me. I was left with neither time nor the space to avert him. I hit him square and fell flat on the road with my bike coming on me. I couldn't just realize what happened. Somebody picked up my bike. Somebody picked up my belongings. A group led me limping to the tea shop nearby. I felt a severe pain in my shoulder and my ribs, couldn't bear to open my eyes. I could hear a voice ordering to bring me some water. The person asked me to drink some water and said I will be alright. He asked if he could call somebody to accompany me to the hospital. After a long pause, I drank some water and looked at the man in front of me. I was shocked. GOD ! both his hands were severed from elbow. I just couldn't pick myself up in the situation. The man who consoled and encouraged me was a handicapped beggar. In my shock I was dumb.
When help arrived, I made it to the hospital and had an X-ray. The next day I was Bound in a plaster and wore braces for a month. Doctors advised me not to drive for two months.
Now, I am on my feet. Back to my routines and everytime I cross Sungam junction, my eyes will involuntarily search for the handicapped MAN. You never realize what humanism means till you have the real taste of it. I had it. Now I thank God for the accident.

Sunday, April 27, 2008

Magical Weekend......

When the phone rang , I was really frustraed and thought of silencing it. But when I saw the caller, I became very curious to what it might be. It was my friend and a leading magician in the state, Mr. Yona (short for Yoganathan). It was an invitation to join him in one of the country clubs. There was a get together hosted by an MNC and the magic show was a part of it. I couldnt resist the invitation. together with my cousin Mohan, I made a dash to the venue. It was a country club set at the foot hills of western ghat, not far from my place. Greenery all around and beautifull villas punctuating it.
The show began with his usual ' Chaplin act' and continued with a lot of items that involved the guests. The crowd was much delighted with the way things appeared and disappeared. For one with a keen interest in magic and knows all its secret, I was more interested in seeing how the performer stood to the situation. The way he managed the crowd so close and around him.
My interest in magic began ever since I saw small time performers do at my school. Later when I got the chance to really learn the tricks, my interests faded once I knew the secrets. But with a new trick, it once again popped up. Now having known the secrets, my attention goes towards the presentaion. Every performer has his own style. So the same trick is delivered in different ways by each performer depending on how imaginative and innovative they are. Now it was this great person who has bagged several national awards for stage and close-up performance. There was one last act, which he had choreographed and was rehersing for an international competetion. After he called someone from the audience, he made him do the act following his instructions. He made the man scissor through his handkerchief and made him look miserable at the damage he did to his own belonging. Later the particaipant was presented with a new one instead. Then Yona climbed on to a bench and raised a cloth in front of him and instantly dropped it. To everyone's amazement, the magician had disappeared. Wow ... what a show. The secret is simple. But consider his age and an open air theatre, the speed with which he enacted the vanishing act was superb. Sure enough, secrets are the root of magic. But that is not just all. Practice and dedication bring fantastic reults. And this was another testimony to it.

Wednesday, April 23, 2008

பத்து பைசாவில் பளபள.....

இன்று ராதா சித்தியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு விஷயம் சொன்னார்கள். "எங்க அம்மா எங்கிட்ட பத்து பைசாவும் ஒரு மஞ்சப் பையும் கொடுதனுப்புவா. பத்து பைசாவுக்கு ஒரு படி உமி வாங்கிண்டு வருவேன். அதை நன்னா கருக்கி ஒரு டப்பாவில் அடைத்து வைப்பா. ஒரு மாசம் பூரா அந்த குடும்பம் அத்தனை பேரும் அதை எடுத்துதான் பல் தெய்ப்போம். அம்மா போனப்புறம் உமிக்கரியும் போயிடுத்து". உண்மையான வார்த்தை. இன்று எங்கள் வீட்டில் டூத் பேஸ்ட் மட்டும் நாலு அல்லது ஐந்து டியூப் செலவாகும். அத்தனை பெரிய குடும்பம். இது போல இன்னும் எத்தனை புது செலவுகள் யோசித்துப் பார்க்க வேண்டும். தவிர்க்க முடிந்த செலவுகள் தவிர்க்க முடியாத செலவுகள் என்னென்ன என்று ஒரு லிஸ்ட் போட வேண்டும்.

Monday, April 21, 2008

இனிய அனுபவம்.

கால இயந்திரத்தில் ஏறி ஒரு ஐம்பத்து ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற ஒரு இனிய அனுபவம் இன்று எனக்கு வாய்த்தது. பழனியிலிருந்து சற்று தூரத்தில் உள்ளது கலையம்புத்தூர் அக்ரகாரம். இன்று காலை நான் சென்று இறங்கிய போது அந்த கிராமம் அப்பொழுதுதான் துயில் எழுந்ததுபோல் இருந்தது. ஒரே ஒரு தெரு. இரண்டு பக்கமும் வீடுகள். இன்னும் பழைமை மாறாமல் அப்படியே இருந்தது கிராமம். வாசல் தெளித்துக் கோலம் போட்டு வீட்டுத் திண்ணையில் பெரியவர்கள் பேப்பர் படிக்க சிறுவர்கள் சந்தியாவந்தனம் செய்யும் காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. வீட்டின் படிப்புரைகள் தாழ்ந்து உள்ளிருக்கும் உலகத்தை மறைத்து நின்றது. வீதியின் கோடியில் ஒரு கோவில், ஒரு பஜனை மடம், ஒரு சமூகக் கூடம் இருந்தது. நான் சென்றது குழந்தை லட்சுமியின் ஆண்டு நிறைவுக்கு. சமூகக் கூடத்தில் அந்த நிகழ்ச்சி . அந்த ஊரின் அழகில் லயித்த நான் வீட்டின் உள்ளே சென்று பார்க்கும் ஆவலில் பூட்டியிருக்கும் அவர்கள் வீட்டுத் திண்ணையில் நெடுநேரம் அமர்ந்து கிராமத்தின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தினேன். திடீரென்று அங்கு தோன்றிய மாப்பிள்ளை வெங்கடேஷ் வீட்டைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். நான் நினைத்தது போலவே வீடு விஸ்தாரமாக இருந்தது. உள்ளே நுழைந்ததும் ஒரு நடை. அதைத் தாண்டி ஒரு பெரிய ஹால். நடுவில் ஊஞ்சல். அதன் பின்னால் சமையலறை புழைக்கடை என்று என் கனவில் வரும் கிராமத்து வீடு. நகரின் ஆளரவத்தில் பழகிய எனக்கு இந்த அமைதி பிடித்துப் போனதில் வியப்பில்லை. இது போல ஒரு சாதாரண, அமைதியான, அழகான கிராமத்தில் வாழும் மக்களைப் பார்க்கும்போது எனக்குப் பொறாமை தலைதூக்குகிறது. என்றாவது நானும் இதுபோல் அமைதி தேடி வந்துவிட வேண்டும் என்று மனம் ஏங்குகிறது.

Friday, April 18, 2008

நினைவுகள்.

பழைமையை நினைவுகூர்வது பழைமையை நோக்கி இழுத்துச்செல்லும் சதியல்ல. அது மறந்த நாட்களை அசை போடும் ஒரு இன்பப் பயிற்சி. அவ்வளவுதான். சரி, தொடங்கிய விஷயத்திற்கு வருவோம். இதுவும் அதுதான். பழைய நினைவுகள். இப்பொழுது சம்மர் வெக்கேஷன் தொடங்கும் சமயம். எங்கள் வீட்டில் திருவிழா கோலம் பூணும் நேரம். முன்பு சென்னையை காலி செய்து சொந்தங்கள் தங்கள் சுற்றம் சூழ எங்கள் வீட்டில் வேடந்தாங்கல் பறவைகள் போல பறந்து வந்து இன்புற்ற நாட்கள் அவை. எங்கள் கூட்டுக் குடும்பத்தின் இன்ப நாட்கள். பெரியவர், சிறியவர் என்று முப்பதுக்கும் மேற்ப்பட்டோர் கூடி மகிழ்ந்த இனிய நாட்கள். இந்த ஆண்டு விடுமுறையின் வரவை ஆவலுடன் எதிர்பார்ப்போம் அன்று. வீட்டில் பெண்கள் குடும்ப வேறுபாடின்றி அனைவரையும் உபசரித்தனர். குழந்தைகள் தங்கள் இஷ்டம்போல் கத்திக் கூச்சலிட்டு விளையாடி மகிழ்ந்திருந்தோம். படுக்கப் பாயும் தலையணையும் போதாமல் நாங்கள் பகிர்ந்துகொண்டு சந்தோஷமாகத்தான் இருந்தோம். எதிலும் என்னது உன்னது என்று பாகுபாடு பார்த்ததில்லை. நான் குழந்தைகளில் பெரியவனாதலால் 'சட்டாம்பிள்ளை' போல எல்லோரையும் நடத்தினேன். கூட்டமாக குளிப்பது, சாப்பிடுவது, விளையாடுவது, உறங்குவது என்று ஒவ்வொன்றையும் ரசிக்க முடிந்தது. ஹூம்.....
இன்று .... பத்திரிகை வைத்து அழைத்தாலும் யாருக்கும் ஆண்டு இறுதி விடுமுறைக்கு ஊருக்கு வர நேரமில்லை, வசதியில்லை, சூழ்நிலையில்லை. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தால் சம்மர் கோச்சிங் கேம்ப் அல்லது அடுத்த வருஷத்திய பாடச் சுமையை சுமக்க பிள்ளைகளை அனுப்பி விடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் தனித் தனி தீவாக நின்று மற்றவர்களைப் பார்க்கும் அவலம். 'ஐயோ.. அவனுக்கு இப்பவே டென்த் போர்ஷன் எடுக்க ஆரம்பிச்சுட்டா' , ' பிளஸ் டூவில் நல்ல மார்க் எடுக்க இருவத்தி நாலு மணிநேரமும் படிக்கணும்' , ' ஸ்விம்மிங் கிளாஸ் யோகா கிளாஸ் அது இதுன்னு அவ அப்படி பிசியா இருக்கா. எங்க ஊருக்கு வர்றது? ' இப்படி எதோ ஒரு காரணம் காட்டி தட்டிக்கழிக்கத்தான் முடிகிறது நம்மால். மாறிவரும் சூழ்நிலையை குற்றம் சொல்லிப் பயனில்லை. தெரியும்தான். ஆனால் அதற்காக உறவுகளை உதறிவிட்டுவிட வேண்டும் என்ற அர்த்தமில்லையே. இன்றுள்ள ஒற்றைப் பிள்ளை குடும்பங்களில் உறவுகளைப் புரிந்துகொள்ள முனைவோர் இல்லை. காலத்தின் கட்டாயம், வேலை நிமித்தம் என்று கூறுகளாகத் துண்டுகளாக பெரியவர்களை 'ஹோமில்' சேர்த்துவிட்டு குழந்திகளை 'ஹாஸ்டலில்' விட்டு நாமும் தனித் தீவாக வலம் வந்து என்னத்தை கண்டோம்?
கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் தீர்வுகளும் இருந்தன. விட்டுக்கொடுத்தல், பகிர்ந்துகொள்ளுதல், பெரியவருக்குக் கீழ்படிதல் என்று பல நல்ல விஷயங்கள் அதில் நிறைதிருந்தன. ஆனால் இன்று அதை எல்லாம் மற்றவருக்காக தியாகம் செய்கிறோம் என்ற கண்ணோட்டம்தான் உள்ளது. அன்று யாரும் 'மற்றவர்' என்று இருக்கவில்லை. எல்லோரும் நம்மவர், நாம் என்ற ஒரு நோக்கு இருந்தது. இன்றைய சூழல் இத்தனை ஒரு இழப்பாக பார்கவில்லையா? இல்லை என்றால் இந்த சமுதாயம் கண் திறக்கவில்லை, உறங்குகிறது. அதனை எழுப்பும் முயற்சியில் சற்றும் மனம் தளராத 'அம்புலி மாமா' விக்ரமன் போலத் திரும்பத் திரும்ப வந்து உருத்துவேன்.

Thursday, April 17, 2008

ஊக்க மருந்து...

நோண்டல். இது எனக்கு பிடித்தமான ஒன்று. எந்த ஒரு பொருளையும் நான் அப்படியே ஏற்றுக்கொண்டதில்லை. அதை திறந்து பார்த்து கற்றுக்கொள்ள என்மனசு துடிக்கும். இப்படித்தான் என் பெரியப்பா மாணிக்கத்தின் வீட்டில் இருந்த ஒரு பழைய கிராமபோன் என்னை ஈர்த்தது. அதை திறந்து பார்த்து அதன் மெக்கநிசத்தை கற்றுக்கொண்டேன். அதன் சவுண்ட் பாக்ஸ் எப்படி ஒரு சின்ன ஊசியிலிருந்து ஓசையை வாங்கி அதை பெரிதாக்கி கொடுக்கிறது என்று தெரிந்துகொண்டேன். இதற்கு என் பெரியப்பா தந்த ஊக்கம் என்னை ரேடியோ ரெக்கார்ட் பிளேயர் என பல்வேறு சமாசாரங்களை நோண்ட வைத்தது. ஒரு முறை சிதம்பரம் சித்தப்பா வீட்டில் ரேடியோ பழுதானபோது அதை 'ஐயப்பன் பார்த்து கொள்ளட்டும்' என விட்டு விட்டார். நானும் நோண்டி ஒரு வால்வை உடைத்து விட்டேன். பிறகு புதிய வால்வு வாங்கி போட்ட பிறகு பாடியது. எனக்கு புதுப்பாடம் கிடைத்தது. நோன்டும்போது கவனமாக இரு. எதையும் உடைக்காதே. இது தான் அந்த பாடம் . இன்றுவரை இதை நான் நினைவில் வைத்துள்ளேன். இன்று நான் ஒரு தேர்ந்த நோன்டியாவதற்கு இவர்கள் கொடுத்த ஊக்கம்தான் காரணம். இப்பொழுது கம்பியூட்டரின் வலை பின்னலில் புகுந்து விளையாட இந்த ஊக்கம்தான் என்னை நகர்த்துகிறது, நடத்துகிறது.

ஊர் கூடி தேர் இழுக்க ....

என் சிறு வயதில், எங்கள் வீட்டின் அருகில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் விழா எடுத்தால் பத்து நாட்கள் ரொம்பவும் விமரிசையாக நடக்கும். தினமும் சாயந்திரம் பூசாரி அக்னி சட்டியை கையில் எடுத்து கம்பத்தை சுற்றி ஆடுவார். பிறகு சிறப்பு பூஜைகள் எல்லாம் நடந்தேறும். ஊரில் யாராவது லோக்கல் வித்துவான் பாட்டு கச்சேரி நடக்கும். தினமும் எதாவது ஒரு சுவையான நிகழ்ச்சி இருக்கும். ஊர் மக்கள் எல்லோரும் பேசியம்மனுக்கு தாரளமாக செய்தனர். பத்துநாளும் கோவில் அடைத்து பந்தல் போட்டு தடபுடல் பண்ணுவாங்க . இப்போ நினைச்சாலும் இனிக்கிறது..
காலம் மாறும்போது அதற்கேற்ப காட்சிகளும் மாறின. முதலில் வெட்டுப்பட்டது லோக்கல் வித்துவான். அதற்கு பதிலாக வந்தது ஆர்கெஸ்ட்ரா. அடுத்தது கும்மி கோலாட்டம் இதற்கு பதில் சின்ன சைஸ் திரையில் பக்தி படங்கள். சின்ன புரோஜெக்டரில் ரீல் மாற்றுவது, அந்த இடைவேளையில் ஓடி போய் சீக்கிரமாய் சாப்பிட்டு விட்டு வருவது என்று ரொம்பவும் சுவாரசியமாக இருக்கும். பிறகு வந்தது வீடியோ காச்செட். படம் போடுபவரின் வேலை சுலபமயிற்று.
இன்றும் திரு விழா நக்கிறது. ஆனால் ஒன்றல்ல. பேச்சியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பன்னாரி மாரியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், முனியப்பன் கோவில், என்று பத்து தப்படிக்கு ஒரு கோவில். அனைத்திலும் ஒரு இளைஞர் அணி, தனி தனியாக வசூல், ஒரு ஆர்கெஸ்ட்ரா, ஒரு பட்டி மன்றம், யாராவது சினிமா பிரபலம் பங்குகொள்ளும் நிகழ்ச்சி, ஜோடிக்கப்பட்ட ரதம் இல்லை. அதற்கு பதில் ரெடி மேட் திண்டுக்கல் தேர். வாணவேடிக்கைக்கு ஒரு காண்டிராக்ட். ஒயில் கும்மி, லசீம் ஆட்டம் பொய்க்கால் குதிரை என்று களைகட்டும் ஊரில் இன்று ஒன் டே மேட்ச் மாதிரி மாரியம்மன் கோவில் விழா. என்னமோ மனசில் நெருடுகிறது.

Sunday, April 13, 2008

நான் எப்பொழுது எழுத தொடங்கினேன்

எனக்கு நாலு வயசிருக்கும். என்னை சிறந்த கல்வியாளனாக காணவேண்டும் என்ற கனவோடு பெரியப்பா மாணிக்கம் அவர்கள் என்னை தன் மடியிலிருத்தி ஒரு பெரிய தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதில் அகர முதல எழுத்துக்களை சொல்லி கொடுத்தார். அது முடிந்து ஆறு மாசத்தில் நான் அவருக்கு " My dear Big Father" என்று தொடங்கி ஒரு கடிதம் எழுதினேன். அவருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அதற்குப்பின் எழுதுவதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. எட்டாவது வகுப்பு படிக்கும்போது பள்ளியின் ஆண்டு மலருக்கு ஒரு சிறுகதை எழுதினேன். ஊக்குவிப்போர் இல்லாத காரணத்தினால் எழுதுவதில் எனக்கு ஈடுபாடு வரவில்லை. இப்பொழுது ஒரு புது முயற்சியில் இறங்குக்றேன். எழுதலாம் என்று நினைத்து புதிதாக தலைப்புகளை யோசிக்கிறேன். என் துறை சார்ந்த சிந்தனைகளையும் மற்ற துறைகளை சார்ந்த கருத்துகளையும் இங்கே தருவது என் விருப்பம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

என் இனிய நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இந்த ஆண்டு சென்ற ஆண்டைவிட சிறப்பாகவும் அனைத்து நன்மைகளும் வளங்களும் சிறந்து மென்மேலும் செல்வம் கொழிக்க , வாழ்வு நலம் பெற , உடல் நலம் சிறந்திருக்க வாழ்த்துக்கள். வாழ்க வையகம் ...வாழ்க வளமுடன்.

Saturday, April 12, 2008

வணக்கம்.

வணக்கம்.
எழுத்துலகில் இது என் முதல் கன்னி முயற்சி. இதை ஊக்குவித்து பயனுள்ள அறிவுரைகள் தருமாறு வேண்டுகிறேன். உங்களுக்கு ருசிகரமாக இருக்கும் வகையில் இந்த தளத்தை உருவாக்க என் முயற்சிகள்.
நன்றி.

Vanakkam

Vanakkam,
This is only my maiden attempt in writing something. Hope you'll enjoy it. I would welcome comments and suggestions on how I can improve this space. So here I go...