Thursday, December 18, 2014

மஹா லக்ஷ்மி அஷ்டகம் :



நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே சுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹா லக்ஷ்மி நமோஸ்துதே.

நமஸ்தே கருடாரூடே கோலாசுர  பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹா லக்ஷ்மி நமோஸ்துதே .

சர்வஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே

சித்தி புத்தி ப்ரதே தேவி புக்தி முக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே சதா தேவி மகாலட்சுமி நமோஸ்துதே .

ஆத்யந்த ரஹீதே தேவி ஆதி சக்தி மகேஸ்வரி
யோகஞே யோக சம்பூதே மகாலட்சுமி நமோஸ்துதே .

ஸ்தூல சூக்ஷ்ம மஹா ரௌத்ரெ மஹா சக்தி மஹோதரே
மஹா பாப ஹரே தேவி மகாலட்சுமி நமோஸ்துதே .

பத்மாசன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி
பரமேசி ஜகன் மாதஹா மகாலட்சுமி நமோஸ்துதே .

சுவேதாம்பர தரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகன் மாதாஹ மகாலட்சுமி நமோஸ்துதே .

மகாலட்சுமி அஷ்டகம் ஸ்தோத்ரம் யஹ்படேத பக்திமான் நரஹ
சர்வசித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி சர்வதா .

ஏக காலே படேநித்யம் மஹா பாப் விநாசனம்
தவி காலம் யஹ் படே நித்யம் தனதான்ய சமன் வித .

த்ரிகாலம் யஹ் படே நித்யம் மஹா சத்ரு விநாசனம்
மகாலக்ஷ்மீர் பவேன் நித்யம் பிரசன்னா வரதா சுபா.

இதி இந்திர கிருதம் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டகம் ஸ்லோகம் சம்பூர்ணம் ..

Tuesday, December 9, 2014

முருகன் பாமாலை

முருகன் பாமாலை .

ஆதி மூல முருகா -முருகா  ஆதி தேவ முருகா .
ஞான பால முருகா - முருகா  ஞான தேவ முருகா
கோவில நாடி வந்தேன்  முருகா - குறைகள் தீர்க்க வருவாய் -உன்
மலையை நாடி வந்தேன் முருகா - மனமிரங்கி வருவாய் .- பல
படிகள் ஏறி வந்தேன் முருகா பரிவடைந்து வருவாய்
கிரியிலேறி வந்தேன் முருகா பெரிய வாழ்வு தருவாய்
கவிகள் படி வந்தேன் முருகா கருணை ஒன்று தருவாய் - பல
துதிகள் பாடி வந்தேன் முருகா துணைவனாகி வருவாய் .
மயில் அழைக்க வந்தேன் முருகா மனமகிழ்ந்து வருவாய் .
கொடியழைக்க வந்தேன் முருகா குணமறிந்து வருவாய் .
அடிமையாகி வந்தேன் முருகா அதிபனாகி வருவாய் .-உன்
அருமை கண்டு வந்தேன் முருகா அகமகிழ்ந்து வருவாய் .
வினைகள் நீங்க வந்தேன் முருகா வேவெடுது வருவாய் . -என்
பவமழிக்க வந்தேன் முருகா பதமளிக்க வருவாய் .
மது மணக்கும் மலரே முருகா மனமிருக்கும் ஒளியே .
அதிசயத்தின் உருவே முருகா அருண ஞான குருவே .
வேத நாத ஒளியே முருகா வேத போத முடிவே .
வேத போத முடிவே முருகா வேத கான வடிவே .
காலமற்ற கலையே முருகா கருவமற்ற நிலையே .
கனமயூர மணியே முருகா கௌரி தந்த கனியே.
அன்னை தந்தை ஆனாய் முருகா அரிய செல்வம் ஆனாய் .
என்னை ஆளும் முருகா - முருகா உன்னை என்றும் மறவேன் .
அன்பர் ஒங்க வேண்டும் முருகா அவனி ஒங்க வேண்டும் .
துன்பம் நீங்க வேண்டும் முருகா இன்பம் ஒங்க வேண்டும் .
தர்மம் ஒங்க வேண்டும் முருகா தானம் ஒங்க வேண்டும் .
தவமும் ஒங்க வேண்டும் முருகா சாந்தி ஒங்க வேண்டும் .
பக்தி ஒங்க வேண்டும் முருகா சக்தி ஒங்க வேண்டும் .
சக்தி  ஒங்க வேண்டும் முருகா சித்தி ஒங்க வேண்டும் .
அன்பர் கூட வேண்டும் முருகா துதிகள் பாட வேண்டும் .
துதிகள் பாட வேண்டும் முருகா நீயும் ஆட வேண்டும் .
மயிலும் ஆட வேண்டும் சேவல் கொடியும் ஆட வேண்டும் .
அயிலும் ஆட வேண்டும் முருகா அரவம் ஆட வேண்டும் .
உமையும் ஆட வேண்டும் முருகா உலகம் ஆட வேண்டும் .
தமையன் ஆட வேண்டும் உனது தந்தை ஆட வேண்டும்
ஞான ஜோதி மயமே எங்கும் நாம கீதா மயமே .
நாம கீதா மயமே எங்கும் முருகன் நாம மயமே .

அரோஹர........

Saturday, December 6, 2014

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும்

விண்கொண்ட  தேவர்கள்  போற்றிப் பணிந்திடும் 

விண்கொண்ட தேவர்கள் போற்றிப் பணிந்திடும் மெய்ப்பொருளே கலியுக வரதா
பண்கொண்ட செந்தமிழ் தோத்திரம் பாடியே பணிந்தனம் ஆண்டருள்வாய் நீ சதா .
ஐயப்பா உன்போல் தெய்வம் அவனியில் இல்லையப்பா , அதிசயப் பிறவியப்பா அருள்தரும் பிள்ளையப்பா .
அமரர்களும் புலியாய்  ஆனார் உமக்கப்பா , ஹரிஹரன் உமக்கம்மை அப்பனுமப்பா

இருமுடி தாங்கியே மாமலை ஏறி வந்து ஈஸ்வரனே உந்தன் காட்சி கண்டோர்
கரும வினை அகன்றே நலம் எய்திட காண்பதன்றோ  , சந்தேகமுண்டோ

சப்த ரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் ஏறி  வரும் சதமக பதவிகொள் தேவேந்திரன்
சித்தம் மகிழ்ந்தவன் செய் தவ பாக்யதினால் சிம்ஹ வாகனமாகி உனைச் சுமந்தான் .

அன்புடன் மாலை அணிந்துனை போற்றிடும் ஐயப்பன் மாரெல்லாம் நீயே அன்றோ .
துன்பம் தவிர்த்து  எனை ஆண்டருள்வாய் இன்னும் சோதனை ஏனுனக்கு  இது நன்றோ .

அம்புவி மாருதம் வென்புனல் தீயும் நீ . அண்ட சராசரம் யாவையும் நீ
ஆய அப்பனும் குரு தெய்வமும் , வேத புராண கலைகளும் அறிவனும் நீ
கூறும் மெஞ்ஞானிகள் உள்ளமே கோயிலாய் கொண்டவனே வருவாய்  தருணம்
ஆறும் கடந்த பிரகாச பிரம்மானந்த ஐயப்ப ஸ்வாமி பொன்னடி சரணம்
சரணம் ஐயப்பா , ஐயப்பா சரணம் என்று ஓதும் உனைச் சார்ந்தோர் தரணியில் உயர்ந்தோர்
 காசினில் துயரப்பா கடிதினில்  தீரப்பா , கலியுக மெய்யப்பா துய்யனே ஐயப்பா .



ஸ்ரீ ஐயப்பன் பஞ்சரத்தின மாலை 


கருணாகரக் கடவுள் அரனாரிடம் சென்று சூர்பகாசுரன் தவமிருந்து
கை வைத்தபேர் சிரசு துய்ய நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம் குருவாம் அரன் சிரசில் அவன் கரம் வைதிடச் சென்றடுத்தான்
வள்ளல் அய்யன் ஐவரளிக் காய்தனில் ஒளிந்ததை மால் அறிந்தோடி வந்து
சரச மோகினியாகி அசுரனை நீறாக்கி சம்புவை அணைந்து பெற்ற
சந்ததிப் பொருளாகி வந்த கண்மணியே  என் சங்கடம் தீருமையா .

சரணம் ஐயப்பா என்றுருகும் அன்பர்க்கு நீர் சகல சாம்ராஜ்யம் அருளும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரம சத்தான மெய்ஞான குருவே .

                                         ..........................................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .

பண்டு காலாஸ்ய பதி கொண்ட மீனாக்ஷி நிஜ பக்தனாம் உக்ரபாண்டியன்
பாலகன் வேண்டுமென்று ஈசனாம் சம்புவை பிரார்த்தித்து அனேக வரமும்
கொண்டு மனமகிழ் பூபன் அண்டையில் மால் அரன் மனம் இசைய மூர்த்தியாகி
குமரவேஷத்தினால் அவரை மோகம் செய்து கொஞ்சிடத் தஞ்சமென்று
தொண்டு செய்கின்ற நாளன்று கள்வர்களாம் துஷ்டரை நிக்ரஹித்த
தீரனே , தீன பரிபாலனே நீ எனதுள துயரமெல்லாம் அகற்றும் .

சண்டப் பிரசண்ட உத்தண்ட கோதண்ட தர்ம சாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம சத்தான மெய்ஞான குருவே.
                                         .................ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பச்சை நிறம் மெச்சுமொரு நற்புரவி மீதினில் சவாரி வரும் தீரன் என்றும்
கண்டிருக்கின்றதொரு  தொண்டருக்காகவே காலினில் விலங்கு பூட்டி
துட்ஷணம் செய்யாமல் யக்ஷியை இருத்தியும் சொல்வாரிது கேட்க வைத்த
தொண்டிமை ஆகுமென் துயர் தீர்த்து அனுகிரஹம் உறுதியாய்ச்  செய்யுமையா
சச்சிதானந்த ஹரி சங்கரானந்த ஜெய சம்மோஹனாங்கன் என்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான் குருவே
                                                              ........................ஸ்வாமியே சரணம் ஐயப்பா .

மாயானுபூதியால் யானுமுந்தன் பதம் மறந்திருந்தேன் இதுவரை
மற்றொருவர் இல்லையே இத்தரணி மீதிலென் வம்ச வழியான தெய்வம் .
நீயாதரிக்கின்ற நிஜ ரூபன்  என்று நான் எனதுளம் தெளிவு கொண்டு
நின் சரண தூளி  என் சிரமீதணிந்து உன் நிஜ பக்த பிரியனாமென்
காயாபுரித் தலைவா நான் கவலை கொண்டு கண்ட இடமெலாம் சுற்றி வந்தேன்
கண்காட்சி தந்து எனது புண்பாடு அறிந்து அருளும் காருண்ய வாரிநிதியே
தாயான பூரணி புராதனி மகிழ்ந்தருளும் தர்மசாஸ்த்ரையனென்றும்
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞானகுருவே .
                                         ...............................ஸ்வாமிய சரம ஐயப்பா.

மங்களானந்த சரணங்களை வணங்கி அருள் வாக்கினால் பஞ்ச இரத்தின மாலைபோல் ஓதினேன்
மலை வளரும் ஆதி கவிவாணர்தம் திருவருளால் எங்கும் நிறை ஈசனே
நீ மனதிரங்கி இவ்வேழைசொல் செவியுணர்ந்து
ஏழை இது உன் திருக்கருணை ரசமழை பொழியும் ஏனலோஜனதை நாட்டி
பொங்கு புவிமீதினில் எங்கு சென்றாலும் உன் புகழ் பாடி யான் வாழவே
புத்திர , மித்ர, களத்ர , பக்தி , முக்தி ,ஞான சௌபாக்கியமும்  அருள்வீர்
பைங்குவீர் நானிலத்து உதித்த வாசனென்றும்,
தவயோக சித்தாந்த சபரி பீடாஸ்ரம ஸ்தான மெய்ஞான குருவே

                                          ....................சுவாமிய சரணம ஐயப்பா.......

Saturday, November 29, 2014

நடராஜ பத்து.....


பாடல் : 1

மண்ணாதிபூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நா‎ன்கி‎ன் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவ‎ன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இ‏ருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒ‎ன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை   ஈன்ற அப்பனே எ‎ன் குறைகள் யார்க்கு உரைப்பேன்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே

பாடல் : 2

மானாட, மழுவாட, மதியாட, புனலாட, மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட, மறை தந்த பிரம்மனாட,
கோனாட வானுலகக் கூட்டமெல்லாமாட, குஞ்சர முகத்தனாட,
குண்டலம் இரண்டாட, தண்டைபுலி உடையாட, குழந்தை முருகேசனாட,
ஞான சம்பந்தரோடு ‏ இந்திரர் பதினெட்டு முனி அட்ட பாலகருமாட,
நரைதும்பை அறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட,
வினையோட உனை பாட, எனை நாடி இ‏துவேளை, விருதோடு ஆடி வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 3

கடலெ‎ன்ற புவிமீதில் அலையென்ற உருக்கொண்டு கனவென்ற வாழ்வை நம்பி,
காற்றென்ற மூவாசை மாருதச் சூழலிலே கட்டுண்டு நித்தம் நித்தம்
உடலென்ற கும்பிக்கு உணவென்ற ‏ இரைதேடி ஓயாமல் இரவு பகலும்
உண்டுண்டு உறங்குவதைக் கண்டதே யல்லாது ஒரு பயனடைந்திலனே!
தடமென்ற‏ இடி கரையில் பந்தபாசங்களெனும் தாபமாம் பின்னலிட்டு
தாயென்று சேயென்று நீயென்று நானென்று தமியேனை இது வண்ணமாய்
இடையென்று கடைநின்று ஏனென்று கேளாது இருப்பதுன் அழகாகுமோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 4

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அ‎ன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
எ‎ன்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீ‎ன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 5:

நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமு‎ன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுக‎ன் அறு முகன் இருபிள்ளை ‏ இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னி‏டமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை ‏ இதுவல்லவோ ‏
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை ‏
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 6:

வழிகண்டு உன்னடியை துதியாத போதிலும் வாஞ்சையில்லாத போதிலும்
வாலாயமாய் கோயில் சுற்றாத போதிலும் வஞ்சமே செய்த பொதிலும்
மொழி எதுகை மோனையும் ‏ இல்லாமல் பாடினும்
மூர்க்கனேன் முகடாகினும் மோசமே செய்யினும்
தேசமே கவரினும் முழுகாமியே ஆகினும் பழியெனக் கல்லவே தாய்தந்தைக்கல்லவோ
பார்த்தவர்கள் சொல்லார்களோ பாரறிய மனைவிக்கு பாதியுடல் ஈந்த நீ
பாலகனை காக்கொணாதோ எழில்பெரிய அண்டங்கள் அடுக்காய் அமைத்த நீ
என் குறைகள் தீர்த்தல் பெரிதோ
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 7

அன்னை தந்தைகள் எனை ஈன்றதர்க்கு அழுவனோ, அறிவிலாததற்கு அழுவனோ
அல்லாமல் நான்முகன் தன்னையே நோவனோ ஆசை மூன்றுக் கழுவனோ
முன்பிறப்பென்ன வி‎னை செய்தேன் என்றழுவனோ என் மூட அறிவுக்கு அழு‎வனோ
முன்னில் என் வினை வந்து மூளும் என்றழுவனோ முத்தி வருமெ‎ன்று உணர்வனோ
தன்னை நொந்தழுவனோ உ‎ன்னைநொந்தழுவனோ தவமென்னஎன்றழு வனோ
தையலர்க்கு அழுவனோ மெய்வளர்க்க அழுவனோ தரித்திர திசைக்கழுவனோ ‏ இன்னுமென்ன பிறவி வருமோ என்றழுவனோ எல்லாம் உரைக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் : 8

காயாமுன் மரமீது பூ பிஞ்சறுத்தனோ கன்னியர்கள் பழி கொண்டனோ
கடனென்று பொருள் பறித்தே வயிறெறித்தனோ கிளை வழியில் முள்ளிட்டனோ
தாயாருடன் பிறவிக்கென்ன வினை செய்தனோ தந்த பொருள் ‏ இல்லை யென்றனோ
தானென்று கர்வித்து கொலை களவு செய்தனோ தவசிகளை ஏசினேனோ
வாயாரப் பொய் சொல்லி வீண்பொருள் பறித்தனோ வானவரை பழித்திட்டனோ
வடவுபோல் பிறரை சேர்க்காது அடித்தனோ வந்தபின் என்செய்தேனோ
ஈயாத லோபியென்றே பெயரெடுத்தனோ எல்லாம் பொறுத் தருளுவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 9 :

தாயார் ‏ இருந்தென்ன தந்தையும் ‏ இருந்தென்ன தன் பிறவி உறவுகோடி
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன தாரணியை ஆண்டுமென்ன
சேயர்கள் ‏ இருந்தென்ன குருவாய் ‏ இருந்தென்ன சீடர்கள் ‏ இருந்தும் என்ன,
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன, நதிகளெல்லாம்
ஓயாது மூழ்கினும் என்ன பலன் எமனோலை ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ ‏ இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 10 :

‏இன்னமும் சொல்லவோ உன் மனம் கல்லோ இரும்போ பெரும் பாறையோ ‏
இருசெவியும் மந்தமோ கேளாது அந்தமோ ‏ இது உனக்கழகு தானோ
என் அன்னை மோகமோ ‏ இதுவென்ன சாபமோ, இதுவே உன் செய்கைதானோ
‏இருபிள்ளை தாபமோ யார்மீது கோபமோ ஆனாலும் நான் விடுவனோ
உன்னை விட்டெங்கு சென்றாலும் விழலாவனோ நான் உனையடுத்துங் கெடுவனோ,
ஓஹோ ‏ இது உன்குற்றம்என்குற்றம் ஒன்றுமில்லை உற்றுப்பார் பெற்ற ‏ஐயா
என் குற்றமாயினும் உன் குற்றமா யினும் ‏ இனியருள் அளிக்க வருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

பாடல் 11
சனி ராகு கேது புதன் சுக்கிரன் செவ்வாய் குரு சந்திரன் சூரியன் இவரை 
சற்றெனக்குள்ளாக்கி ராசிபனிரெண்டையும் சமமாய் நிறுத்தியுடனே 
பனியொத நட்சத்திரங்கள் இருபதிஎழையும் பக்குவப்படுத்தி பின்னால் 
பகர்கின்ற கிரணங்கள் பதினொன்றையும் வெட்டி பலரையும் அதட்டி என்முன் 
கனிபோலவே பேசி கடுநினைவு நினைக்கின்ற கசடர்களையும் கசக்கி 
கர்த்தனின் தொண்டராம் தொண்டர்க்கு  தொண்டர்கள் தொண்டர்கள் தொழுதனாக்கி  
இனியவள மருவு சிருமணவை முனுசாமிஎனை ஆள்வதினி உன்கடன்காண் 
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே 

மேற்கண்ட இந்த பத்து பாடல்களும் நடராஜ பத்து. பாடலாசிரியர் - சிறுமணவை முனுசாமி முதலியார். தற்போது சிறுமணைவை எனும் ஊர் பெயர் மாற்றம் ஏற்பட்டு, திருவள்ளூர் தாலுக்காவில், கருமுத்தூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

ஓராறு முகமுண்டு ....


ஓராறு முகமுண்டு ,ஈராறு கண்ணுண்டு  ,முந்நான்கு புஜமுமுண்டு .
பன்னிரண்டு கரமுண்டு ,பத்தினி ரெண்டுண்டு , பெற்றதாய் தானுமுண்டு .
தந்தை தமயனுண்டு , தங்கமயில் தானுண்டு , தகுந்த நல்மாமனுண்டு .
குக்குடக் கொடியுண்டு , குகனென்ற பேருண்டு , குமாரவெகு பெருமையுண்டு.
சக்திவேல் தானுண்டு , சமரில் திறமையுண்டு , ஜகத்தில் பிரசித்தியுண்டு.
அழகு மிகவுண்டு , பழனிமலை தானுண்டு  , அடியார்கருளும் அன்புமுண்டு .
சொல்லொண்ணா பிரணவத்தை சோதித்து பிரம்மனை சிறையில் நீ வைத்ததுண்டு . அப்பனுக்கு உபதேசம் செய்த குருநாதனே எப்பவும் என்னை ஆள்வையே .

Thursday, November 20, 2014

ஏரகப்பதியில் இருப்பவராம்




ஏரகபபதியில் இருப்பவராம் ,
 தாரகமாய் எங்கும் தழைப்பவராம் ,
சரவணப்பொய்கையில் பிறந்தவராம்
சதுர்முகன் குருவாய் இருப்பவராம் .
சுரர்கள் சோகம் தீர்த்தவராம்,
 சூரன் போகம் மாய்த்தவராம் .
சக்திகள் இருவர் சூழ்ந்தவராம் ,
முக்திப் பொருளாய் இருப்பவராம் .
கும்ப முனிக்கருள் செய்தவராம்
 வம்பர்கள் வாய் மதம் தீர்த்தவராம் .
தந்தைக்குக் குருவானவராம் ,
விந்தைகள் அநேகம் செய்தவராம் .
அருணகிரிக்கருள் புரிந்தவராம் ,
 கருணையால் உலகத்தைக் காப்பவராம் .
ஆறுமுகமாய் இருப்பவராம் ,
ஆறுதல் அளித்திட நிற்பவராம் .
நக்கீரனுக்கருள் புரிந்தவராம் ,
நான்முகன் தொழிலும் நடத்துவாராம் .
உமை மகிழ் பாலனாய் வந்தவராம் ,
தமை அடைந்தோர்க்கு அனுகுணமான்வராம் .
வேதப் பொருளாய் , உள்ளவராம் ,
போதமளிதிடும் புண்ணியராம் ,
திருமால் மருகனாய் வந்தவராம் ,
திருவேரக நிதியாய் இருப்பவராம்..

Saturday, October 4, 2014

வித்யாரம்பம் .


இன்று நவீனின் கல்வி துவக்கம் - வித்யாரம்பம் ........