Saturday, November 29, 2014

ஓராறு முகமுண்டு ....


ஓராறு முகமுண்டு ,ஈராறு கண்ணுண்டு  ,முந்நான்கு புஜமுமுண்டு .
பன்னிரண்டு கரமுண்டு ,பத்தினி ரெண்டுண்டு , பெற்றதாய் தானுமுண்டு .
தந்தை தமயனுண்டு , தங்கமயில் தானுண்டு , தகுந்த நல்மாமனுண்டு .
குக்குடக் கொடியுண்டு , குகனென்ற பேருண்டு , குமாரவெகு பெருமையுண்டு.
சக்திவேல் தானுண்டு , சமரில் திறமையுண்டு , ஜகத்தில் பிரசித்தியுண்டு.
அழகு மிகவுண்டு , பழனிமலை தானுண்டு  , அடியார்கருளும் அன்புமுண்டு .
சொல்லொண்ணா பிரணவத்தை சோதித்து பிரம்மனை சிறையில் நீ வைத்ததுண்டு . அப்பனுக்கு உபதேசம் செய்த குருநாதனே எப்பவும் என்னை ஆள்வையே .

No comments: