Thursday, November 20, 2014

ஏரகப்பதியில் இருப்பவராம்




ஏரகபபதியில் இருப்பவராம் ,
 தாரகமாய் எங்கும் தழைப்பவராம் ,
சரவணப்பொய்கையில் பிறந்தவராம்
சதுர்முகன் குருவாய் இருப்பவராம் .
சுரர்கள் சோகம் தீர்த்தவராம்,
 சூரன் போகம் மாய்த்தவராம் .
சக்திகள் இருவர் சூழ்ந்தவராம் ,
முக்திப் பொருளாய் இருப்பவராம் .
கும்ப முனிக்கருள் செய்தவராம்
 வம்பர்கள் வாய் மதம் தீர்த்தவராம் .
தந்தைக்குக் குருவானவராம் ,
விந்தைகள் அநேகம் செய்தவராம் .
அருணகிரிக்கருள் புரிந்தவராம் ,
 கருணையால் உலகத்தைக் காப்பவராம் .
ஆறுமுகமாய் இருப்பவராம் ,
ஆறுதல் அளித்திட நிற்பவராம் .
நக்கீரனுக்கருள் புரிந்தவராம் ,
நான்முகன் தொழிலும் நடத்துவாராம் .
உமை மகிழ் பாலனாய் வந்தவராம் ,
தமை அடைந்தோர்க்கு அனுகுணமான்வராம் .
வேதப் பொருளாய் , உள்ளவராம் ,
போதமளிதிடும் புண்ணியராம் ,
திருமால் மருகனாய் வந்தவராம் ,
திருவேரக நிதியாய் இருப்பவராம்..

No comments: