Thursday, May 29, 2008

குருவியைப் பறக்க விடுங்கள்.

சில நாட்களாகவே, குருவி படத்தையும் அதன் நாயகன் விஜயையும் கிண்டல் செய்யும் வண்ணம் மெசெஜுகளும் ச்க்ராப்புகளும் வந்து குவிகின்றன. யோசித்துப்பார்த்தால் இதனால் குருவி படத்திற்கு பெரியதொரு விளம்பரத்தைத் தேடித் தந்திருக்கின்றனர் "தலை"யின் ரசிகர்கள். ஒரு கலைஞன் தான் விரும்பும் பாத்திரத்தை ஏற்றுத் தன் திறைமை முழுவதையும் பயன்படுத்தி ரசிகர்கள் ஏற்று இன்புறும் வண்ணம் திரையில் தருவதையே தன் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். யாரும் விரும்பாத , வெறுக்கும் கதையை திரையில் வழங்கும் எண்ணம் அவனுக்கில்லை. இதுபோன்ற துவேஷங்களால் அவன் துவண்டு போவதுமில்லை.
படம் பிடிதிருப்பவர்கள் பார்க்கிறார்கள். பிடிக்காதவர்கள் சும்மா இருந்துவிட்டுப் போகலாமே? இது போல மண் வாரித் தூற்றும் எண்ணம் எதற்கு? சிவாஜி - MGR, ரஜினி - கமல் , போன்ற தமிழ்த் திரையில் தடம் பதித்த பெரும் நடிகர்கள் பல கோடி ரசிகர்களைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை. தங்கள் நாயகர்கள் படம் ரிலீசாகும் நேரம் , தோரணம் கட்டுவது, போஸ்டர் ஓட்டுவது, பால் அபிஷேகம் செய்வது என்று இம்சை இல்லாத வகையில் தங்கள் தலைவர்களைக் கொண்டாடினார்கள்.
நாம் ஆங்கிலப் படங்களில் வீர தீர சண்டைக் காட்சிகளைக் கண்டு பெரிதாகப் பாராட்டுகிறோம். ஆனால் அதையே நம் நாயகன் ஒருவன் செய்தால் கிண்டலடிக்கிறோம். தூம் ஹிந்தி படம் பார்த்து சிலாகிக்கிறோம் . ஆனால் தமிழ்ப் படத்தில் சாகசக் காட்சியை நையாண்டி செய்கிறோம். MGR நூறு பேரை அடித்து துவம்சம் செய்யவில்லையா ? ரஜினி ஆயிரம் பேரை ஊதித் தள்ளவில்லையா ? இதை எல்லாம் கலை என்று ஏற்றுக் கொள்ளும் மனம் உள்ளோர் குருவியை மட்டும் பறக்க விடாமல் சிறகொடிப்பதேன்.

Sunday, May 25, 2008

கோடை(வை)யை குளிர்விக்க வந்த மழை...

இன்று மதிய உணவுக்கு வெளியில் செல்ல தயங்கியிருந்தேன் , காரணம் வெயில். சுட்டெரிக்கும் வெயிலில் சென்று சாப்பிடுவதைவிட பட்டினி கிடக்கலாம் என்று தோன்றியது. தயக்கத்துடன் வெளியில் வந்த நான் மேற்கே கரிய வானத்தைப் பார்த்ததும் இன்று மழை வந்தால் நல்லது என்று நினைத்துக்கொண்டேன். நினைத்த மாதிரியே வந்தது மழை . பெருமழை. வீதியெங்கும் ஆறாக நீர் ஓட, பார்க்கவே பரவசமாக இருந்தது.
வீட்டிற்கு வரும் வழியெங்கும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நஞ்சுண்டாபுரம் சாலையில் ஓரிடத்தில் டிராபிக் ஜாம். என்னவென்று பார்த்தால், சாக்கடை அடைப்பு. அடைத்துக்கொண்டிருந்தது பிளாஸ்டிக் கேரி பேக் ஒரு குவியலாக. எத்தனை நாளாக தேங்கியிருந்த குப்பையோ இன்று தன் வேலையை செய்துகொண்டிருந்தது. சாக்கடை நீர் வழிந்து சாலையில் குளம்போல் தேங்கி, நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்ல வழியின்றி நின்றிருந்தன. பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும், நிறுத்த வேண்டும் என்று வாய் கிழியப் பேசுவோரும், சட்டம் போட்டுவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் காட்டுவோரும் இன்றும் இந்தச் சாலையில் சென்று வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
மழை பெய்துகொண்டிருந்தபோது வீசிய குளிர் காற்றையும் மீறி , மழை நின்றபின் பூமியின் வெப்பம் வெளிக்கிளம்பி முன்பைவிட உஷ்ணமாகத் தாக்கியது. இது கோடையின் இறுதி நாட்களாக இருக்கும். கோவைக்கு இனி மாரிக்காலம் குளிர்ந்ததாக இருக்கும். பிளாஸ்டிக் பைகளை குப்பையில் போடுவோரும் தங்கள் பணியை செவ்வனே செய்துகொண்டிருப்பர். இதற்க்கு முடிவு.....? கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. பூனையும் ரெடி . மணியும் ரெடி. கட்டுபவர்தான் (நாம்தான்) இன்னும் ரெடியாகவில்லை.

Friday, May 23, 2008

ஒரு அங்கீகாரம் தரும் ஊக்கம்.

சமீபத்தில் நான் எழுதிய 'மறதி எனும் மாமருந்து' எனும் வலைப் பதிவு தமிழ்மணம் . காம் அதனால் தெரிவு செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக எழுதத் தொடங்கும் என்போல் உள்ளோர்க்கு இந்த அங்கீகாரம் ஒரு ஊக்க பெருமருந்தாக உள்ளது. வழக்குத் தமிழில் எழுதும் எனக்கு தூய தமிழில் எழுத ஒரு தூண்டுகோலாக உள்ளது . என் எழுத்துக்களை யாரும் படிப்பார்களா , ஆதரவாக கருத்துச் சொல்வார்களா என்று ஏங்கிக்கிடந்த என் மனதுக்கு , கோடையின் வெப்பத்தில் வாடி நிற்கும் செடிக்குக் கிடைத்த மழைச் சுகம்போல் ஆறுதல் அளிக்கிறது. இந்த ஊக்கம் என்னை இன்னும் ஆயிரம் வலைப் பதிவுகள் பதிக்க வைக்கும் தன்மை கொண்டது. மேலும் எழுதுவதன் மூலமே என் நன்றியினை தெரிவிக்க முடியும். அதனால் மேலும் பல சிந்தனைகளை தேடிச் சேகரித்து பலரும் இன்புறும் வண்ணம் படைக்கப் புறப்பட்டுவிட்டேன் .

Tuesday, May 20, 2008

மறதி எனும் மாமருந்து.......

மறதி ..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் - சிலருக்கு நோயாகவும் , சிலருக்கு வருத்தமாகவும், பலருக்கு கேலி பண்ண ஒரு சாக்காகவும் தெரிகிறது . எனக்கு எப்பொழுதுமே மறதி என்பது உடன் பிறந்த ஒரு குணமாக உள்ளது. சில நேரங்களில் அலைக்கழிப்பு , சில நேரங்களில் ரசித்து சிரிக்க வைக்கும் நிகழ்வுகள், வேறு சில தருணங்களில் என்னையே நான் கூர்ந்து நோக்கும் நிலை என பல அவதாரங்கள் கொண்டது என் மறதி. மற்றவர்கள் பார்வையில் என்னை அது விநோதப்படுதினாலும், எனக்கு என் மறதியை பிடித்திருக்கின்றது.

எண்களை   நினைவில் கொள்வது, முகங்களை மனதில் நிறுத்துவது, பெயர்களை அவற்றுக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுடன் இணைத்து நினைவில் நிறுத்துவது என்று பல பயிற்சிகள் செய்த போதிலும், என் மறதி ஒரு துளியும் முன்னேற்றம் காணவில்லை. என் அன்றாட வாழ்வில் மறதி பழக்கப்பட்டு விட்டதால் , நான் சில யுக்திகளை கையாண்டு சமாளித்துக்கொள்கிறேன் . உதாரணத்துக்கு, அலுவலகத்துக்கு புறப்படும் நேரம், ஒவ்வொரு பாக்கெட்டில் ஒவ்வொரு பொருள் என்று , என் பர்ஸ் , மொபைல் போன், வண்டி சாவி , கண்ணாடி , என ஒவ்வொரு பொருளையும் வைத்து கொள்கிறேன்.
சில நேரங்களில் என் மறதி எனக்கே புரியாத விதத்தில் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இப்படித்தான் ஒரு நாள் என் சித்தப்பா , தன்னை கடையில் இறக்கி விட சொன்னார். நானும் அவரை பைக்கில் உட்கார வைத்து ஒட்டி சென்றேன். மழை தூரி கொண்டிருந்ததால் ஒரு ரெயின் கோட் அணிந்து சென்றேன் . சித்தப்பாவை இறக்கி விட்ட கையோடு அப்படியே அலுவலகம் வந்து விட்டேன். அலுவலகத்தில் வந்திறங்கி ரெயின் கோட்டை கழற்றியதும்தான் தெரிந்தது நான் சட்டை போடாத சமாசாரம். அன்றைக்கு பார்த்து என்னை பல புதிய மாணவர்களை நேர்முகம் கான சொன்னார்கள். நான் போட்டிருந்த டீ சர்டுடனே உட்கார்ந்துவிட்டேன். (பேண்ட் ? அதான் எப்பமே போடுவம்ல?). இடைவேளையின் போது பறந்தடித்து வீட்டுக்கு வந்து உடை மாற்றி சென்றேன்.
இவ்வளவு சிரமம் தந்தாலும், என்னால், என் மறதியினால், என் பழைய காயங்களை, இழப்புகளை, சோகங்களை , பரிகாசங்களை எல்லாம் தூரத்தில் தூக்கிஎறிந்துவிட்டு புதியதாக சாதனைகள் படைக்க முடிகிறது. எனக்கு மற்றவர் செய்த துரோகங்கள், காயங்கள் ஏதும் நினைவிற்கு வராது. எல்லாரையும் அப்பொழுது பார்க்கும் முகத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். எல்லாரையும் நல்லவர்களாய் பார்கிறேன். சோகம் என்னை தீண்டாது காக்கும் என் மறதியை நான் ஏன் மறுக்க வேண்டும்?

Friday, May 16, 2008

Joke's on you

Recently I recieved an Email, a forward from a friend. It was about a rickshaw ride in Delhi. The story is that two friends were going by an auto rickshaw. These youngsters amused themselves with a lot of 'Sardarji' jokes. The Auto driver, who happened to be a Sardarji, did not utter a word. At the end, when they paid for the ride, the auto driver gave them a Rupee each, asking them to give it to the first Sardarji beggar they met.

The two friends could never chance to see a single Sardarji who begged for alms. So they preserved the coin as mark of respect for Sardarjis who worked hard for their livelyhood, did anything to keep themselves up. Anything but begging.

This sort of jokes on another community is common world wide. In India Sardarjis are made fun of. In Tamilnadu we call Andra people 'Goltis'. In keral the word 'Thamizhan' is synonymous to fools. In Andra 'Aravadu' is a less intellect fellow and so on...

In Australia, the aborigins , in England, the Irish, in other European countries, the Polish, in the US, the Negros and we find this 'man teasing man' is prevelant everywhere. But What makes one feel a member of another community is inferior is quite debatable. We have never given a thought to the fact that India and its integrity is guarded more by those in the bordering states. The Punjabis have borne the brunt more than those in the interior. The Negros have lent their toil to make America what it is today. But pulling their legs continues . Why should anybody call themselves cultured, when they cant see a fellow human being as an equal to themselves?

Sunday, May 11, 2008

பரீட்சை (முடிவு) ஜுரம்.

இது பரீட்சை முடிவுகள் வெளியாகும் நேரம் . சாதாரணமாக எல்லோரும் தங்கள் முடிவை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் நாட்கள். முழுப் பரீட்சை முடிந்து விடுமுறையைக் கழிக்க ஊருக்குச் சென்றாலும் , விடுமுறையை எத்தனை இன்பமாகக் கழித்தாலும், இந்த ஜுரம் எப்படியும் தொற்றிக் கொள்ளும். நல்ல மார்க் எடுத்து பாசாகும் படிப்பிஸ்டுகளுக்கும் , என்னை மாதிரி காலத்தின் கொடுமையால் பாசாகும் மக்குகளுக்கும் ஒரே மாதிரி இந்த ஜுரம் வந்து படுத்தும். நல்ல மார்க் வாங்கினால், நான் நன்றாகப் படித்தேன். மார்க்கு கம்மியானால் , ரொம்ப ஸ்ட்ரிக்ட் கரெக்ஷன் என்று சாக்கு. இப்படி சமயத்துக்கு தக்கவாறு பதில் ரெடியாக இருக்கும். ஆனால் ரிசல்ட் வந்து அடுத்த நாளே ஜுரம் போய் விடும் , ரிசல்ட் எப்படி இருந்தாலும். இப்பொழுது போல முன்னமேயே பள்ளிக்கு வந்து புக்ஸ் , யுனிபாரம் வாங்கும் அவஸ்தை இல்லை. அதனால் ஸ்கூல் திறந்த பின்புதான் ஊரிலிருந்தே வருவோம். அதுவரை கொண்டாட்டம்தான் . அடுத்த கால் பரீட்சை வரும்போழுதுதான் திரும்ப ஜுரம்.

இன்று முழுப் பரீட்சை லீவுக்கு யாரும் ஊருக்குப் போவதில்லை. அப்படியே போனாலும் பத்து நாட்கள் கூட சந்தோஷமாக இருக்க முடியாது. அதற்குள் ரிசல்ட், புக்ஸ், யூனிபார்ம் , டியூஷன் அல்லது கோச்சிங் கிளாஸ் இப்படி பல டென்ஷன் சமாசாரங்களும் கூடவே வந்து பயமுறுத்தும். இதில் எங்கே லீவை என்ஜாய் பண்ணுவது. மார்க்கு சுமாராக வாங்கும் மக்கள் தப்பித்தார்கள். பாஸ் ஆனால் சந்தோஷம்தான். இந்த படிபிஸ்ட் ஜாதி தான் பாவம். 91 க்கும் , 91.1 க்கும் இடையில் போராட்டம். மார்க் கம்மியனால் திரும்பவும் படித்து பரீட்சை எழுத வேண்டும். அப்புறம் மேல்படிப்புக்கு இடம் பிடிக்க அப்பாவை விரட்ட வேண்டும். அதிலும் நமக்குப் பிடித்த காலேஜில் இடம் கிடைக்க வேண்டும், நம் நண்பர்களும் அதே காலேஜில் சேர வேண்டும் . இப்படி பல தொந்தரவுகள். நண்பர்கள் வேறு காலேஜில் சேர்ந்துவிட்டால் நமக்கு நரகம்தான். அப்புறம் வேலை தேடும் படலம். எங்களுக்கு இதெல்லாம் தெரியாது. SSLC முடிந்தால் முக்கால்வாசி ஜனம் டைப் ஷார்ட்ஹேண்ட் படிக்க போய் விடுவார்கள் . காலேஜ் போவது மிகச் சிலரே. அப்படியே போனாலும், ஹிஸ்டரி , காமர்ஸ் , எகனாமிக்ஸ் என்று எது கிடைத்தாலும் படிப்பார்கள் . இன்று நண்பர்கள் எதில் சேர்கிறார்களோ அதுதான் நல்ல படிப்பு. சேர்ந்த பிறகுதான் தெரியும் அதன் கஷ்ட்டம்.
எனக்குத் தெரிந்த பையனுக்கு ஒரு பிரச்சனை. 10th பெயில் ஆனால் டுடோரியல்ல சேர்ந்துடுவேன். பாஸ் பண்ணினா என்ன பண்ணறது ? பிளஸ் டூ சேர்வதா இல்லை டிப்ளமா சேர்வதா ? ஒரே குழப்பம். எப்படிப்பட்ட இமாலயப் பிரச்சனை ? இதற்கெல்லாம் நல்ல தீர்வு , படிப்பதெல்லாம் படியுங்கள். ஆனால் பரிட்சையே வேண்டாம். எப்படி என் ஐடியா ?

Sunday, May 4, 2008

Reunion

In Thamizh, there is a phrase "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ ", meaning, that words fail when lost souls find themselves after a long time. But I feel this has to be viewed in a different perspective. Recently it happened in my family. Two dear sisters (my Mom and Aunt), who were so close and intimate were split due to a trivial issue that flared up into a family feud. Now a common issue brought about a situation that my Aunt should come home to us. Initial reluctance was overcome. We secretly wished there would be no fireworks now. Every soul in the family had given their try at reconciliaton earlier. Now we were eager to see these two back to their old friendly forms. The day came and my aunt arrived. My Mom greeted her. They were talking of all things, but something was really missing. Each had a complex feeling of uneasiness of the distance that prevailed between them. They both were assuming that the other would not accept wholeheartedly. Now having come this far, I sincerely feel they talk out the main issue amicably and see that the matters are done straight. But as I said, words fail. There is uneasiness in the air, but we are looking forward to the sisters run into each other and hug and shrug off the differences.
Pray to God this happens at the earliest and both the families be happy on the Reunion.