Friday, May 23, 2008

ஒரு அங்கீகாரம் தரும் ஊக்கம்.

சமீபத்தில் நான் எழுதிய 'மறதி எனும் மாமருந்து' எனும் வலைப் பதிவு தமிழ்மணம் . காம் அதனால் தெரிவு செய்து பிரசுரிக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக எழுதத் தொடங்கும் என்போல் உள்ளோர்க்கு இந்த அங்கீகாரம் ஒரு ஊக்க பெருமருந்தாக உள்ளது. வழக்குத் தமிழில் எழுதும் எனக்கு தூய தமிழில் எழுத ஒரு தூண்டுகோலாக உள்ளது . என் எழுத்துக்களை யாரும் படிப்பார்களா , ஆதரவாக கருத்துச் சொல்வார்களா என்று ஏங்கிக்கிடந்த என் மனதுக்கு , கோடையின் வெப்பத்தில் வாடி நிற்கும் செடிக்குக் கிடைத்த மழைச் சுகம்போல் ஆறுதல் அளிக்கிறது. இந்த ஊக்கம் என்னை இன்னும் ஆயிரம் வலைப் பதிவுகள் பதிக்க வைக்கும் தன்மை கொண்டது. மேலும் எழுதுவதன் மூலமே என் நன்றியினை தெரிவிக்க முடியும். அதனால் மேலும் பல சிந்தனைகளை தேடிச் சேகரித்து பலரும் இன்புறும் வண்ணம் படைக்கப் புறப்பட்டுவிட்டேன் .

1 comment:

Pushkala said...

Aaha!
Thodarattum ungal thedalgal, mozhiyin jalangalal! :-)