Tuesday, May 20, 2008

மறதி எனும் மாமருந்து.......

மறதி ..... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் - சிலருக்கு நோயாகவும் , சிலருக்கு வருத்தமாகவும், பலருக்கு கேலி பண்ண ஒரு சாக்காகவும் தெரிகிறது . எனக்கு எப்பொழுதுமே மறதி என்பது உடன் பிறந்த ஒரு குணமாக உள்ளது. சில நேரங்களில் அலைக்கழிப்பு , சில நேரங்களில் ரசித்து சிரிக்க வைக்கும் நிகழ்வுகள், வேறு சில தருணங்களில் என்னையே நான் கூர்ந்து நோக்கும் நிலை என பல அவதாரங்கள் கொண்டது என் மறதி. மற்றவர்கள் பார்வையில் என்னை அது விநோதப்படுதினாலும், எனக்கு என் மறதியை பிடித்திருக்கின்றது.

எண்களை   நினைவில் கொள்வது, முகங்களை மனதில் நிறுத்துவது, பெயர்களை அவற்றுக்கு சம்பந்தப்பட்ட பொருள்களுடன் இணைத்து நினைவில் நிறுத்துவது என்று பல பயிற்சிகள் செய்த போதிலும், என் மறதி ஒரு துளியும் முன்னேற்றம் காணவில்லை. என் அன்றாட வாழ்வில் மறதி பழக்கப்பட்டு விட்டதால் , நான் சில யுக்திகளை கையாண்டு சமாளித்துக்கொள்கிறேன் . உதாரணத்துக்கு, அலுவலகத்துக்கு புறப்படும் நேரம், ஒவ்வொரு பாக்கெட்டில் ஒவ்வொரு பொருள் என்று , என் பர்ஸ் , மொபைல் போன், வண்டி சாவி , கண்ணாடி , என ஒவ்வொரு பொருளையும் வைத்து கொள்கிறேன்.
சில நேரங்களில் என் மறதி எனக்கே புரியாத விதத்தில் என்னை திக்குமுக்காட வைத்துவிடும். இப்படித்தான் ஒரு நாள் என் சித்தப்பா , தன்னை கடையில் இறக்கி விட சொன்னார். நானும் அவரை பைக்கில் உட்கார வைத்து ஒட்டி சென்றேன். மழை தூரி கொண்டிருந்ததால் ஒரு ரெயின் கோட் அணிந்து சென்றேன் . சித்தப்பாவை இறக்கி விட்ட கையோடு அப்படியே அலுவலகம் வந்து விட்டேன். அலுவலகத்தில் வந்திறங்கி ரெயின் கோட்டை கழற்றியதும்தான் தெரிந்தது நான் சட்டை போடாத சமாசாரம். அன்றைக்கு பார்த்து என்னை பல புதிய மாணவர்களை நேர்முகம் கான சொன்னார்கள். நான் போட்டிருந்த டீ சர்டுடனே உட்கார்ந்துவிட்டேன். (பேண்ட் ? அதான் எப்பமே போடுவம்ல?). இடைவேளையின் போது பறந்தடித்து வீட்டுக்கு வந்து உடை மாற்றி சென்றேன்.
இவ்வளவு சிரமம் தந்தாலும், என்னால், என் மறதியினால், என் பழைய காயங்களை, இழப்புகளை, சோகங்களை , பரிகாசங்களை எல்லாம் தூரத்தில் தூக்கிஎறிந்துவிட்டு புதியதாக சாதனைகள் படைக்க முடிகிறது. எனக்கு மற்றவர் செய்த துரோகங்கள், காயங்கள் ஏதும் நினைவிற்கு வராது. எல்லாரையும் அப்பொழுது பார்க்கும் முகத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். எல்லாரையும் நல்லவர்களாய் பார்கிறேன். சோகம் என்னை தீண்டாது காக்கும் என் மறதியை நான் ஏன் மறுக்க வேண்டும்?

2 comments:

Pushkala said...

Nalla velai.. T-shirt aavathu aninthiruntheergale? Illavittal manavargal gathi enna??? Ungalai pattri naan thuli kooda kavalai padavillai..... Neengal than pugazhenthiya nirvana aasami aache! ;-)

Unknown said...

Raji: Itha padikkumbothu siripa irunthuthu. anna padichumudichappo.........
manassa thottuthu.......