Monday, September 21, 2009

பசங்க ....

ஆரம்பத்தில் எதோ பெரியவர்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்றுதான் நினைத்தேன். ஒரு கிராமத்தில் சில சிறுவர்கள் அட்டகாசம் பொறுக்க முடியாமல் பெரியவர்கள் தவிப்பதும் , போலீஸ் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதுமாக துவங்கும் படம் , எதோ ஒரு கிராமத்து வாத்தியார் இவர்களைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தால் , மேலும் ஒரு பையன் வந்து சேருகிறான். ஊருக்கு புதிதாக வந்த பையன் , அவன் வீடு , தந்தை - தாய்இடையே பிரச்சனை , அதனால் சிறுவனின் மனநிலை பாதிப்பது , அதனை அவன் சந்திப்பது என்று செல்கிறது. சிறிவர்களை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அழுத்தமான வசனங்கள் மனதில் பதிகின்றன.
சிரித்துக்கொண்டு பார்க்க தொடங்கி , சிந்திக்கவும் வைத்து அழவும் வைக்கிறது படம். ஒரு வெட்கம் பாட்டு நல்ல இனிமை....
சமுத்திரக்கனி தொடர்ந்து இது போன்ற படங்களை தர ரசிகர்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கிராமத்து எளிமையும் இனிமையும் எதார்த்தமான வசனங்களும் மேக் அப இல்லாத முகங்களும் நல்ல கருதும் சேர்ந்தால்...... ஒரு தரமான படம் தருவது நமக்கும் நல்லதுதானே?

வாழ்கை.

தோட்டத்தின் வழியே நடந்தேன் - அங்கு
தாவி விழுந்த ஒரு விதையைக் கண்டேன்.
நம் துன்பங்களைப் போல அதனை
ஒரு புயல் வந்து தொட்டது.
நம் துயரங்களைப் போல அதனை
மழை வந்து நனைத்தது

சில வருடங்கள் கழிந்தது. அதை
சென்று பார்வையிட்டேன். - அதுவோ
துன்பங்களால் அரவணைக்கப்பட்டு
துயரங்களால் பாலூட்டப்பட்டு
மரமாக வளர்ந்திருந்தது. விதைக்கு
மழையும் புயலும் தாயாக இருந்தது.

மனிதர்களின் வாழ்க்கையான விதையும்
மரமாக வெற்றியடையச் செய்வதும்
அவரவர்கள் வாழ்வில் வரும்
துன்பங்களும் துயரங்களுமே.
மரம் வளர்ப்போம் . மழை பெறுவோம் .
வாழ்கையை வாழ்வோம் வெற்றி பெறுவோம் .

புவனா .

Friday, September 18, 2009

ஈன்றெடுத்த தாய்


அகிலம் என்னும் புதுமையை நீ


அறிமுகம் செய்தாய் - உன் படைப்பிற்கு


ஆண்டவனை நிகர் கூறினேன்



புதிதாய் ஈன்றவனைக் காண நீ


புது வலிகளைப் பொறுத்தாய் - உன் பொறுமைக்கு


பூமியை நிகர் கூறினேன்



நடப்பது முதல் நடனம் புரியும்வரை


கற்றுத் தந்தாய் - உன் போதனைக்கு


குருவை நிகர் என்றேன்



அண்டத்தை அறிமுகம்செய்தாய் ஆனால் இன்று


ஆண்டவனே கதியென்று முதியோர் இல்லம் புகுந்தாய்


அப்படி இருந்தும் "அவன் என் மகன் " என்றாயே


தாயே ! உன் தாய்மைக்கு நிகர் யாரம்மா ?



புவனா .



என்றும் அவர்.

எங்கும் காணாமல் ஏங்கித் தவித்தேன்
என் தாயவளிடம் என்னவர் எங்கே என்றேன்
எவரும் அறியாமல் எமன் எனும் கள்வன்
எங்கேயோ எடுத்துச் சென்றான் என்றாள்.

அவரின் பிரிவு தாளாமல் அருந்துயருற்றேன்
ஆதவனை அவரை தேடச் சொன்னேன்
அவனோ அவரைக் காணாமல்
ஆணுடன் அமர்ந்த பெண்போல் மலையிடுக்கில் ஒளிந்தான்

துயரம் தாங்காமல் துக்கம் குறையாமல்
திங்களைத் தேடி போகச் சொன்னேன்
சென்றான் அவனும் தேடித் தேய்ந்தான்
காணாததால் அவமானத்தால் தொலைந்தான்

மனம்நொந்து மேகத்தை தேடச் சொன்னேன்
மலைகளின்பின் வேகமாய் மறைந்தான்
கண் கலங்கியது கணம் நின்று கண்மூடினேன்
மனம் சொன்னது "பைத்தியமே அவர் என்னிடம் உள்ளார் " என்று.

அன்று எழுந்தேன் என்றும் நடப்பேன் அவருக்கான நினைவுடன்
என்றென்றும் அன்புடன் நான்.

இவண்
புவனா

Wednesday, September 9, 2009

நீண்ட இடைவேளைக்குப் பிறகு......

மீண்டும் வணக்கம் நண்பர்களே .நீண்ட நாட்களாக என்னை ஆட்கொண்டிருந்த என் தந்தையின் இழப்பின் துயரம் என்னை எழுதத் தூண்டவில்லை. எல்லாமே அர்த்தமற்றதை ஓடிக்கொண்டிருப்பது போல ஒரு நிலை . என் சொந்தக் காலை தேடிக் கண்டுபிடித்து நிற்கப் பழகிக்கொண்டிருந்தேன் இத்தனை காலம். என் சொந்த நிழல் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தேன். இனி வரும் நாட்கள் வாழ்க்கைக்கு வளமும் மகிழ்ச்சியும் சேர்பதாக இருக்கட்டும் என்ற வேண்டுதலுடன் இனி அடிக்கடி உங்களை சந்திக்கும் முனைப்பு இது.