Monday, September 21, 2009

பசங்க ....

ஆரம்பத்தில் எதோ பெரியவர்களை கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்றுதான் நினைத்தேன். ஒரு கிராமத்தில் சில சிறுவர்கள் அட்டகாசம் பொறுக்க முடியாமல் பெரியவர்கள் தவிப்பதும் , போலீஸ் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதுமாக துவங்கும் படம் , எதோ ஒரு கிராமத்து வாத்தியார் இவர்களைத் திருத்துவார் என்று எதிர்பார்த்தால் , மேலும் ஒரு பையன் வந்து சேருகிறான். ஊருக்கு புதிதாக வந்த பையன் , அவன் வீடு , தந்தை - தாய்இடையே பிரச்சனை , அதனால் சிறுவனின் மனநிலை பாதிப்பது , அதனை அவன் சந்திப்பது என்று செல்கிறது. சிறிவர்களை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்கு பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அழுத்தமான வசனங்கள் மனதில் பதிகின்றன.
சிரித்துக்கொண்டு பார்க்க தொடங்கி , சிந்திக்கவும் வைத்து அழவும் வைக்கிறது படம். ஒரு வெட்கம் பாட்டு நல்ல இனிமை....
சமுத்திரக்கனி தொடர்ந்து இது போன்ற படங்களை தர ரசிகர்கள் அவரை ஆதரிக்க வேண்டும். கிராமத்து எளிமையும் இனிமையும் எதார்த்தமான வசனங்களும் மேக் அப இல்லாத முகங்களும் நல்ல கருதும் சேர்ந்தால்...... ஒரு தரமான படம் தருவது நமக்கும் நல்லதுதானே?

No comments: