Monday, October 5, 2009

பழைய பள்ளி நினைவுகள்.


அக்டோபர் 2.
இந்த நாள் என் நீண்ட நாள் கனவு ஒன்று நிறைவான நாள். நான் ரயில்வே ஸ்கூலிலிருந்து வெளிவந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நண்பர்களுடன் ஒன்றுசேர்ந்து சிரித்து மகிழ்ந்த நாள். பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தாங்கள் வணங்கி வழிபடும் பள்ளியையும் ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்த நாள். இந்த நாளில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து ஒரு பெரிய கூட்டம் நடத்தி தாங்கள் வரும் நாட்களில் செய்ய இருக்கும் சேவைகளை வெளிப்படுத்தினோம். இந்த பள்ளிக்கு நல்ல குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஒன்றை கொடையளிதோம்.
பெரிய விருந்து ஒன்றுமில்லைஎன்றாலும் மனம் நிறைய சந்தோசத்தை கொண்டு வந்தவரை உபசரித்தோம். பல ஆசிரியர்களும் ஆசிரியைகளும் வருகை தந்து சிறப்பித்தனர். பள்ளியில் நிலையை உயர்த்துவதற்கு பலரும் பல கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். பசுமை நிறைந்த நினைவுகளே பாடல் நினைவுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை.

No comments: