Saturday, October 17, 2009

தீபாவளி......

இந்த ஆண்டு எனக்கு தீபாவளி கொண்டாட்டம் ஏதுமில்லை. அதனால் மற்றவர் கொண்டாடும் தீபாவளியாக இது அமைந்தது. நான் தூரத்திலிருந்து ரசிக்கும் பார்வையாளனாக இருந்து கண்டு களித்தேன். சாதரணமாகவே தீபாவளியன்று எல்லோரும் பரபரப்பாக குளித்து முடித்து பட்டாசு வைக்க துவங்கி விடுவார்கள். குழந்தைகள் மத்தாப்பும் கம்பி திரியும் வைக்க பெரியவர்கள் வெடிகளை கொளுத்துவார்கள். சமீப காலமாக ஸ்பெஷல் வெடிகள் வந்து மார்க்கெட்டை கலக்குகிறது. முன்னம் கேள்விப்படாத ஆகாய வாணங்கள் கலர் கலராக வித விதமாக காசுக்கேற்ற அளவில் அழகாய் உயர்ந்து மலரும். இரண்டு மூன்று நாட்கள் விடுமுறை. அதனால் குழந்தைகள் வீட்டில் தங்காமல் தெருவில் நின்று வெடி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மில்களிலும் பணிமனைகளிலும் வேலை செய்வோர் போராட்ம் நடத்தி போனஸ் வாங்கி அத்தனையும் புகையாக்கி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி ஒருநாள் சந்தோஷப்படுவதன் அர்த்தம் என்ன யோசித்தும் புரியவில்லை. மாற்ற நாளில் முதுகொடிய வேலை செய்ய வேண்டும். அனால் பணம் கைக்கு வந்ததும் புதுத் துணி எடுத்து , தின்பண்டம் வாங்கி , பட்டாசு வாங்கி, ஒரே நாளில் அத்தனையும் காலி பண்ணுவதில் என்ன இருக்கிறது? கேட்டால் மாற்ற எல்லா செலவுகளும் அவசியம் தானா என்று எதிர் கேள்வி வருகிறது. யார் பதில் சொல்வது?

2 comments:

விக்னேஷ்வரி said...

ஒரு நாள் செலவு செய்வதில் சிலருக்கு சந்தோஷம் இருக்கலாம் சார்.

GIYAPPAN said...

ஆனால் இவ்வளவு பாடுபட்டு, வேலை செய்து, போராட்டம் நடத்தி போனஸ் வாங்கி எல்லாவற்றையும் ஒரே நாளில் கரைப்பது மனசுக்கு கஷ்டமா இல்லையா? இங்கு மில்களில் போராட்டம், பஸ் டிரைவர், கண்டக்டர் போராட்டம், எல்லாம் தீபாவளியை ஒட்டியே வருகிறது. இது எல்லாம் என்ன சந்தோசம்?