Friday, September 18, 2009

என்றும் அவர்.

எங்கும் காணாமல் ஏங்கித் தவித்தேன்
என் தாயவளிடம் என்னவர் எங்கே என்றேன்
எவரும் அறியாமல் எமன் எனும் கள்வன்
எங்கேயோ எடுத்துச் சென்றான் என்றாள்.

அவரின் பிரிவு தாளாமல் அருந்துயருற்றேன்
ஆதவனை அவரை தேடச் சொன்னேன்
அவனோ அவரைக் காணாமல்
ஆணுடன் அமர்ந்த பெண்போல் மலையிடுக்கில் ஒளிந்தான்

துயரம் தாங்காமல் துக்கம் குறையாமல்
திங்களைத் தேடி போகச் சொன்னேன்
சென்றான் அவனும் தேடித் தேய்ந்தான்
காணாததால் அவமானத்தால் தொலைந்தான்

மனம்நொந்து மேகத்தை தேடச் சொன்னேன்
மலைகளின்பின் வேகமாய் மறைந்தான்
கண் கலங்கியது கணம் நின்று கண்மூடினேன்
மனம் சொன்னது "பைத்தியமே அவர் என்னிடம் உள்ளார் " என்று.

அன்று எழுந்தேன் என்றும் நடப்பேன் அவருக்கான நினைவுடன்
என்றென்றும் அன்புடன் நான்.

இவண்
புவனா

No comments: