Monday, September 21, 2009

வாழ்கை.

தோட்டத்தின் வழியே நடந்தேன் - அங்கு
தாவி விழுந்த ஒரு விதையைக் கண்டேன்.
நம் துன்பங்களைப் போல அதனை
ஒரு புயல் வந்து தொட்டது.
நம் துயரங்களைப் போல அதனை
மழை வந்து நனைத்தது

சில வருடங்கள் கழிந்தது. அதை
சென்று பார்வையிட்டேன். - அதுவோ
துன்பங்களால் அரவணைக்கப்பட்டு
துயரங்களால் பாலூட்டப்பட்டு
மரமாக வளர்ந்திருந்தது. விதைக்கு
மழையும் புயலும் தாயாக இருந்தது.

மனிதர்களின் வாழ்க்கையான விதையும்
மரமாக வெற்றியடையச் செய்வதும்
அவரவர்கள் வாழ்வில் வரும்
துன்பங்களும் துயரங்களுமே.
மரம் வளர்ப்போம் . மழை பெறுவோம் .
வாழ்கையை வாழ்வோம் வெற்றி பெறுவோம் .

புவனா .

2 comments:

Mira said...

nice bhuvana. continue posting :)
- Mira. (g.meena)

Mira said...

nice, bhuvana. keep posting.
Mira :)