Wednesday, December 24, 2008

கிருஸ்துமஸ்.....


இன்று இரவு கிருஸ்து பிறந்த இரவு. போதநூரில் எப்பொழுதும் களைகட்டும் கிருஸ்துமஸ் காலம் இந்த ஆண்டு ரொம்பவும் சோகையாக இருக்கிறது. காரணம் தரியவில்லை. என் பள்ளி நாட்களில் கிருச்துமசுக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளை அலங்கரிப்பதிலும், கிருஸ்துமஸ் குடில் அமைப்பதிலும், வாழ்த்து அட்டைகள் வாங்குவதிலும், வண்ண விளக்குகள் அமைப்பதிலும் சுருசுப்பாக இருப்போம். இரவு நேரங்களில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது நண்பர்களுடன் கேரல் ரவுண்ட் போவோம். ஆண்டின் இறுதி வாரம் முழுவதும் ரயில்வே இன்ஸ்டிட்யூடில் ஆங்கிலோ இந்தியன் நண்பர்கள் கூட்டம் பாட்டும் ஆட்டமும் கேளிக்கைகளும் நிறைந்து கிளுகிளுப்பாக இருக்கும். இன்ஸ்டிட்யூட்டின்உள்ளே செல்பவர்கள் கோட் சூட் போட்டிருக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனை உள்ளதால் முக்கால்வாசி ஜனம் வெளியிலிருந்தே ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும். மது பானங்களும் தாராளமாகப் பயன்படுத்தப்படும். மொத்தத்தில் அந்த கும்பலே இங்கிலாந்தில் இருப்பது போல நினைத்துக்கொண்டு தங்களுக்கு வரும் ஆங்கிலத்தில் வெளுதுக்கொண்டிருக்கும்.



இன்று நிலைமை அப்படியில்லை. முதலாவதாக போதநூரின் கடும் குளிர் காணாமல் போயவிட்டது. அடுத்து நாடு இரவில் ஊரில் ரவுண்ட் வர யாருக்கும் நேரமில்லை. எங்கே டி. வீ. பார்த்துவிட்டு படுப்பதற்கே நடுநிசி ஆகிவிடுகிறதே. பிறகெங்கே மற்றதெல்லாம்.

No comments: