Monday, December 1, 2008

உயிரே உன் விலை என்ன???

ஆளை அடிக்க முடியாவிட்டால் அவன் பீயை அடிப்பது என்று கிராமப்புறத்தில் ஒரு கூற்றுண்டு. அதுபோல் உள்ளது சமீபத்தில் மும்பையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம். எதிரியை எதிர்கொள்ள முடியாத கோழைகளின் கொடூரச் செயல். இத்தனை வீரம் என்று, தியாகம் என்று எண்ணும் இதயங்கள் வெட்கித் தலை குனியட்டும்.
ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கும் அவன் விரும்பும் இறைவனை வழிபடுவதற்கும் உத்தரவாதமளிக்கும் ஜனநாயகத்தை விரும்பாத ஒரு கும்பல், தங்கள் சித்தாந்தமும், தங்கள் இறைவனும் சிறந்தது, மற்றவை அனைத்தும் அழிந்துபோக வேண்டியது என்று நம்பும் காட்டுமிராண்டிகள் தங்கள் ஆதாயத்துக்காக இளம் தலைமுறையினரை மூளைச் சலவை செய்து, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகின்றனர்.

இந்தப் பிரிவினைவாதம் நம் நாட்டிலும், ஏன், உலகம் முழுவதுமே பரவிக் கிடக்கிறது. மக்களை பிரித்தாளும் போக்கு மாறவேண்டும். இதற்க்கு தடையாக மதமும் கட்சிகளும் அல்லது வேறேதும் இருந்தால், அதனை உணர்ந்து கிள்ளி எறியவேண்டிய பொறுப்பு அமைதி விரும்பும் அனைவருக்குமே உண்டு.
மாறாக இங்கு நாம் சிறு வயது முதலே இந்த விஷங்களை நம் சமுதாயத்தில் விதைத்துவிட்டு இப்பொழுது அழுது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம்.

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவது அவ்வளவு சுலபமல்ல. அனால் அந்த சிந்தனையை விதைக்காமலிருந்தால் இந்த அளவுக்கு சேதங்கள் விளையாமல் தடுத்திருக்கலாம்.

1 comment:

Pushkala said...

தன் சித்தாந்தங்களையும் கடவுளையும் நேசிப்பவர் ஸஹ மனிதர்களை மறப்பது ஏன்? சொல்லப்போனால் 'பிரிவினைவாதம்' நாமும் தான் ஊக்குவிக்கிறோம்! எப்படி தெரியுமா? 'நாடார் கடை', 'ஐயர் வீடு' என நாம் இன்னமும் தானே சொல்கிறோம்!!!!!!!! யோசித்தால் எனக்கே தலை வெடிக்கிறது........