Sunday, December 21, 2008

இது எப்படி இருக்கு?

தொலைக் காட்சியில் ஒரு சின்ன விளம்பரம். சின்னப் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், இடையில் டெண்டுல்கர் புகுந்து அவர்களுடன் சேர்ந்து விளையாடி மற்ற பெரியவர்களையும் விளையாட்டுக்குள் இழுக்கிறார். நடைமுறையில் இது சாத்தியப்படுமா? யோசித்துப் பார்த்தல் வேதனைதான் மிச்சம். டெண்டுல்கர் போல எத்தனையோ பிரபலங்கள் ஒரு தனியான நேரத்துக்காக ஏங்குவார்கள். வீட்டிலிருந்து இறங்கி தனியே கடைவீதியில் நடக்க முடியாது. சினிமாவுக்கு போகவேண்டுமேன்றால்கூட இரவில் யாருமறியாமல் (சில நேரங்களில் முக்காடிட்டு அல்லது மாறுவேடம் பூண்டு) ராஜா கதைகளில் வருவதுபோல போக வேண்டும். இவ்வளவும் தாமே வரவழைத்துக் கொண்டது. சுதந்திரத்தை விற்றுப் புகழ் தேடி இவர்கள் என்ன கண்டார்கள். இன்று உச்சியில் இருக்கும்போது சுதந்திரம் இல்லை. நாளை வீழ்ச்சி கண்டால் சீந்துவாரில்லை. இப்படியொரு புகழையா இவர்கள் விரும்புவார்கள்? யோசித்துப் பார்த்தல் இந்தப் பிரபலங்கள் தங்கள் புகழையும் விற்றுக் காசு பண்ணுபவர்கள். இவர்களுக்குப் பணம்தான் பெரிது. நாட்டுக்காக விளையாடுபவர்களும் , மக்களுக்காக உழைப்பவர்களும், ரசிகர்களுக்காக தங்கள் கலை சேவையை செய்பவர்களும் எல்லோரும் பணம் பண்ணுவதைதான் கடமையாகக் கொண்டுள்ளனர். அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பார்கள்.

தனி மனித சுதந்திரம் யாருக்கும் புரியாத பொது இவர்களின் இழப்பை நாம் பெரிதாக நினைக்கத் தேவையில்லை .

No comments: