Sunday, July 27, 2008

ஐயோ . . .

சொல்லி வாய் மூடவில்லை, அதற்குள் அகமதாபாத்தில் குண்டு வெடிப்பு என்று செய்தி. அடுத்தது எங்கே என்ற கேள்வி மனதில் வந்து மோதுகிறது. ஒன்றன்பின் ஒன்றாக எல்லாவற்றையும் அடித்து நொறுக்கி, யாருமில்லாத பாலைவனச் சுடுகாட்டில் தன் வெற்றிக் கோடியை நாட்டத் துடிக்கிறது தீவிரவாதம். மனித உயிருக்கு விலையுமில்லை உத்திரவாதமும் இல்லை. மனித சுதந்திரம் பயத்தின் பின்னால் ஒளிந்து நின்று அழுகிறது. அரசாள்பவர்கள் நம்பிக்கை தரும் வகையில் ஒன்றும் சொல்வதில்லை. அடுக்கடுக்காக கொன்று குவிப்போர் அடுத்த இலக்கு எது என்று சொல்லவும் முடியாது. இந்நிலையில் தனி ஒருவன் தன் பாதுகாப்பு குறித்து அஞ்சி யாரிடம் அடைக்கலம் புகுவது?

No comments: