Saturday, July 5, 2008

தேடுதல் நிற்காது

நேற்று என் ஆர்குட் ஹோம் பேஜில் கண்ட பெயர்களில் ஒவ்வொன்றாக தட்டி தேடியதில் ஒரு அரிய பொக்கிஷத்தைக் கண்டேன். கண்ட உடனே பிடித்து விட்டது . உடனே என் எண்ணத்தை ஸ்க்ராப் செய்தேன். திரு. லோகநாதனின் ஆல்பத்தில் நான் கண்டதெல்லாம் அற்புதமான படங்கள். புகைப்படக் கலையின்மீது எனக்குள்ள அளவற்ற ஆவலால் நான் மீண்டும் மீண்டும் அந்த ஆல்பத்தை திறந்து பார்கிறேன். நல்ல கேமரா மட்டும் ஒரு கலைஞனை உருவாக்க போதாது . நல்ல கண்ணும் , கருத்தும், தொழிலின் மீது ஆர்வமும், நம்பிக்கையும் , நல்ல ஈடுபாடும் , இடைவிடா முயற்சியுமே ஒரு புகைப்படக் கலைஞனை உருவாக்கும் என்பது திரு. லோகநாதன் அவர்களின் படங்களே பறைசாற்றுகின்றன. எப்படியும் இந்த கலைக் களஞ்சியத்தை பிடித்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது. நானிருக்கும் கோவையிலேயே இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டுமென்றால் , அது நான் பெற்ற பேறே.

No comments: