Wednesday, July 9, 2008

எதை இழந்தாய் நீ?

மனிதனுக்கு முதல் தேவை தன்னம்பிக்கை,
அதை இழக்காதவரை நீ எதையும் இழக்கவில்லை.
நீ எதையும் இழக்க முடியாது. முதலில் உன்னை நம்பு.
உன் கல்வி, அது நீ கற்றது.
உன் செல்வம், அது நீ சேர்த்தது.
உன் நாவன்மை அது உன் சொத்து.
உன் நம்பிக்கை, அது உன் கவசம்.
இதில் யார் எதைப் பறிக்க முடியும்?
உன் பயம் என்ன? உன் சந்தேகம் என்ன?
உடற்சோர்வு உன்னை வருத்துகிறதா, இல்லை
மனச்சோர்வு உன்னை துரத்துகிறதா? யோசித்துப்பார்.
சோர்வும் பயமும் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்.
அவற்றை உதறித் தள்ளிவிடு. உற்சாகம் தேடி வரும்.
கவலை ஒரு பிணி. ஆறுதல் அதற்கு மருந்தாகாது.
கவலையை விட்டொழிப்பதே மருந்து.
இதையும் மீறி வருந்துகிறாயா ? வா, நானிருக்கிறேன்
தாயாய்த் தந்தையாய் உற்ற தோழனாய் நானிருக்கிறேன்.
கவலைகளை களைந்தெறிய மருத்துவனாய்
நற்றடத்தில் நடத்திட நல்லாசானாய் நானிருக்கிறேன்.
இனி கவலைகளைத் துறந்துவிட்டு
வாழ்கை கதவுகளைத் திறந்துவிடு.
ஆதவனின் ஒளிவேள்ளம்போல் வாழ்வு மலர்ந்திடும்.
காலைப்பனிபோல் துன்பம் கரைந்திடும்.
வண்ணமலர்ச் சோலையாய் இன்பம் சேர்ந்திடும்.
வாழ்த்துக்கள்.

No comments: