Monday, June 30, 2008

அரற்றல் . . .

இரண்டு மூன்று நாட்களாகவே என்னவோ சரியில்லை . என்னவென்று சொல்ல முடியாத ஒன்று என்னை படுத்திக்கொண்டிருந்தது . ஒன்றுமில்லாததுக்கெல்லாம் கோபம் வருகிறது . எனக்கே என்னை பிடிக்காமல் போவதுபோல ஒரு கோபம். எதிர்படும் யாரும் கனிவாய் கேட்கும் கேள்விகளும்கூட என்னை எரிச்சலூட்டுகிறது . இந்த அவஸ்தையை என்னவென்று சொல்வது ? புரியவில்லை. நேற்று விடுமுறை. காலையில் கொஞ்சம் அதிக நேரம் தூங்கலாம்தான் . அனால் சீக்கிரம் எழுந்துவிட்டேன். எந்தக் காரணமுமின்றி நாராயணனை வைது, அடித்து விட்டேன் . பாவம் அவன் அழுதுகொண்டிருந்தான். திடீரென்று ஏதோ தோண வண்டியைக் கிளப்பி டவுனுக்கு சென்றுவிட்டேன். சென்ற இடங்களில் எல்லாம் ஏதோ ஒன்று என்னை நிற்க ஒட்டாமல் விரட்டியது. திரும்பவும் வீட்டுக்கு வந்தேன் . திரும்பவும் பழைய அவஸ்தை. குளிரடிப்பது போலவும் , உடம்பெல்லாம் வலிப்பது போலவும் இருந்தது. வாயு மாத்திரை அது இது என்று என்னென்னவோ முயன்று பார்த்து கடைசியாக புழக்கடைக்கு போய் அப்படியே வாந்திஎடுத்தேன் . கொஞ்சம் தெளிந்தது போல இருந்தது. வந்து படுத்துக்கொண்டேன். ஜுரம் கொஞ்சம் கொஞ்சமாக என்னை அரற்ற வைத்தது. சாதரணமாக ஐயோ அம்மா என்று அரற்றும் ஆளல்ல நான் . காய்ச்சல் வந்தால் எல்லோரையும் படுதிஎடுதுவிடுவேன் . எனக்கு தோன்றும் பழைய பாடல்களை உரக்க பாடுவதே என் அரற்றல் . மற்றவர்களை உறங்க விடாமல் கத்துவேன் . அப்படிதான் இன்றும் கத்தினேன். என்ன செய்வது ? நாளையாவது எல்லாம் தெளிந்து அலுவலகம் போனால் பரவாயில்லை.

No comments: