Saturday, June 7, 2008

வீடு மாறும் வைபவம்......

ஒரு வீட்டை காலி செய்து புது வீட்டுக்கு குடிபெயர்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இதை நான் இன்று உணர்ந்தேன். என் மைத்துனரின் வீடு மாறும் வைபவம் இன்று நடந்தேறியது. அதிலிருந்து நான் கண்டறிந்ததுத்தான் மேற்கூறிய பொன்மொழி. முதலில் வீட்டுப் பொருட்களைப் பேக்கிங் பண்ணும் சடங்கு தொடங்கியது. தேவையான பொருட்கள் , தேவையற்ற பொருட்கள் என்று பிரித்து பெட்டிகளாக கட்ட வேண்டும் . ஒருவருக்குத் தேவையற்றதான பொருள் இன்னொருவரின் பொக்கிஷம் . ஒருவரின் தேவையான பொருள் இன்னொருவருக்குக் குப்பை. இதில் மத்தியஸ்தம் பண்ணி பெட்டிகளில் அடைத்து கட்டி வைக்க வேண்டும் . இதில் ஒவ்வொருவருடைய கமெண்டையும் கேட்க வேண்டுமே. புல்லரித்துவிடும் போங்கள். தேவையற்ற பொருட்களைத்தான் இத்தனை காலமும் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்ற உண்மை ஒதுக்கிய பொருட்களைப் பார்த்தால் தெரியும். சீனு சின்ன வயதாக இருக்கும்பொழுது வாங்கிய சமாச்சாரங்கள் அத்தனையும் இன்று சீண்டுவரின்றி இருந்தது. பழைய மரச் சாமான்கள் , அலங்காரப் பொருட்கள் , துணிக் கடையில் விளம்பரத்துக்காகக் கொடுத்த பைகள் , எதற்கு வாங்கினோம் என்று நினைவில்லாத பழைய புத்தகங்கள் , பட்டியல் நீண்டுகொண்டே போகும் . அத்தனை பொருட்களையும் பிரித்து வைத்து கட்டி வண்டியிலேற்றி புது வீட்டுக்கு கொண்டுசென்று இறக்கியாகிவிட்டது. இனி அடுத்த காமெடி அவற்றை புது வீட்டில் செட்டில் பண்ணுவதில் இருக்கிறது . பரவாயில்லை . அது நாளைதானே . பார்த்துக்கொள்ளலாம் .

No comments: