Monday, October 24, 2022

மன்றுள் ஆடியவா

 மன்றுள் ஆடியவா ஈசா  மன்றுள் ஆடியவா 

 

கன்று மானை கரத்தில் தரித்தவா 

கங்கையை தன சடையில் அணிந்தவா 

பண்டு முப்புரம் தன்னை எரித்தவா 

வந்தியின் பிட்டுக்கு உவந்து மண் சுமந்து  ( மன்றுள்  ) 


மலைய துவஜ பாண்டியனுக்கு நல் 

மருகனாய் வந்த திரு அவதாரா 

வளையல் விற்றிட வைசியனாய் வந்தாய் (2)

வரகுணன் காணவே உந்தன் 

பர லோக தரிசனம் தந்தாய்            ( மன்றுள் )


வாடிய நாரைக்கு முக்தியைத் தந்தவா 

வாதவூரரை ஆளாக்கி வைத்தவா 

பாடிய பாஸ்கரன் பாடுக்குகந்தவா 

பதஞ்சலி முனிவர் தொழ 

ததிங்கிண தித்தோம் எனவே      (மன்றுள்)

No comments: