Monday, April 29, 2019

சித்தம் இரங்கவில்லையா?

சித்தம் இரங்கவில்லையா? கோமதித் தாயே
சத்தம் செவிக்கு வல்லையா.(2)
பக்தி வைராக்கியத்தில் பழகின ஜனங்களுக்கு
முக்தி கொடுக்கும் அந்த
மூல கரணி அம்பா - சித்தம்.

காசு பெருமையோ
கணவர்மேல் கவனமோ.
கடைக் கண்ணால் பாராயோ
கவலையைத் தீராயோ.
பேசினால் வாய்முத்து
பெருகி உதிர்ந்திடுமோ.
நீ பெற்ற பிள்ளையின் மீது
இத்தனை வன்மமோ. - சித்தம்.

No comments: