Sunday, August 10, 2008

சுப்பிரமணியபுரம்....

ஒரு பாட்டை கேட்டதும் இது ஒரு பழைய கதை என்று தெரிந்தது. ஸ்டெப்கட்டிங்கும் பெல் பாட்டம் பேண்டும் போட்டு ஒரு ஹீரோ. படம் நம்ம காலேஜ் கதை மாதிரி இருக்கும் என்று நினைத்தேன். முதல் பாதி முழுவதும் கதையில்லாத சம்பவங்களாக தோன்றியது. வேலை வெட்டியில்லாமல் சுற்றும் கிராமத்து இளசுகளின் கதை என்று நினைத்தேன். அனால் இடைவேளைக்குப் பிறகு நட்பு , காதல், நன்றி உணர்ச்சி, காட்டிக்கொடுத்தல், பழிவாங்குதல் என்று எல்லாவற்றையும் ஒன்றாகக் குழைத்துப் பிசைந்து ஒரு அருமையான கதைக் களத்தை நம் முன் வைக்கிறார் சசிக்குமார் . முற்றிலும் புது முகங்களாக இருக்க கதை நம்மை ஒரு முப்பது வருடம் பின்னோக்கி இழுக்கிறது. கண்கள் இருந்தால் பாடல் மட்டும் முணுமுணுக்க வைக்கிறது. நல்ல படம். கேமரா கிராமத்தின் சந்துகளினூடே ஓடி விளையாடுகிறது. ஆரம்பத்தில் இருந்த நக்கலும் நையாண்டியும் காணாமல்போய், படம் ரத்தச் சிவப்பாக முடிகிறது.

No comments: